சொன்னபடியே திண்டுக்கல்லுக்கு சென்ற கவிஞர் வைரமுத்து, அங்கு பொன்சீனிவாசன் தெருவில் உள்ள மாணவி நந்தினியின் இல்லத்திற்கு சர்ப்ரைஸாக சென்று தங்கப்பேனாவை பரிசாக வழங்கினார். வைரமுத்துவின் திடீர் வருகையால் உற்சாகத்தில் திளைத்துப்போன மாணவியின் குடும்பத்தினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மாணவியை ஊக்கப்படுத்தும் விதமாக கவிஞர் வைரமுத்து, இந்தப்பரிசை வழங்கி உள்ளாராம்.