வைகைப் புயல் வடிவேலுவா இது?... இப்படி ஆகிட்டாரே.... தாறுமாறு வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்...!

First Published Feb 13, 2021, 11:43 AM IST

மீம்ஸ் நாயகனாக மட்டுமே கண்டு ரசித்து வந்த வைகைப் புயல் வடிவேலுவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. 

1990ம் ஆண்டு முதலே தமிழ் சினிமாவை மையம் கொண்டு காமெடி புயலாக கலக்கி வருபவர் வைகைப் புயல் வடிவேலு. இன்று வரை வடிவேல் ஏதாவது ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க மாட்டாரா? எனும் ஏங்கும் ரசிகர்கள் ஏராளம். அப்படிப்பட்ட லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.
undefined
நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். ‘வீச்சருவா வீராசாமி’, ‘சூனா பானா’,‘தீப்பொறி திருமுகம்’, ‘நாய் சேகர்’, ‘ஸ்நேக் பாபு’, ‘படித்துறை பாண்டி’, ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘பாடி சோடா’, ‘வண்டு முருகன்’, ‘அலாட் ஆறுமுகம்’ என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனி ஸ்டைல், உடல்மொழி, வசனம் என ரசிகர்களை குதூகலப்படுத்தியவர்.
undefined
மீம்ஸ் நாயகனாக மட்டுமே கண்டு ரசித்து வந்த வைகைப் புயல் வடிவேலுவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர்கள் மனோபாலா, சந்தானபாரதி, கங்கை அமரன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
நடிகர் மனோபாலா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் லைக்குகளை குவித்து வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலைப் பார்த்ததால் மகிழ்ச்சியான ரசிகர்கள் மீண்டும் எப்போது திரையில் தோன்றுவீர்கள் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
undefined
click me!