எம்.எஸ் விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர் ரகுமான் தொடங்கி இன்று அனிருத், ஜிவி பிரகாஷ் வரை அனைத்து இளம் இசையமைப்பாளர்களுடனும் வாலி பயணித்திருக்கிறார். எண்ணற்ற பாடல்களை எழுதிய வாலி, சம்பள விஷயத்தில் மிகவும் கர்ரானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதுவும் பிரபல இயக்குனர் பாக்யராஜிற்கு பாட்டு எழுத செல்லும் பொழுது, அதிகமாக தன்னை வேலை வாங்குகிறார் பாக்யராஜ் என்று மிகுந்த கோபத்துக்கு உள்ளாகும் வாலி, இனி இந்த பாக்யராஜிடம் பாட்டு எழுதக்கூடாது என்று வைராக்கியத்துடன் இருப்பாராம்.
ஆனால் மிகப்பெரிய தொகையோடு அவரை சென்று சந்தித்து தனக்கு பாடல் எழுதிதருமாறு பாக்யராஜ் மீண்டும் கேட்க, உடனே ஒப்புக்கொண்டு அந்த பாடலை திறம்பட எழுதிக் கொடுப்பவர் வாலி என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு மிக நேர்த்தியான எழுத்தாளரும், பாடல் ஆசிரியர்களாகவும், பண விஷயத்தில் கரரான ஆளாகும் வலம்வந்தார்.