இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப் போவது இவர் தான்?... அடித்துக்கூறும் நெட்டிசன்கள்... காரணம் இதோ...!

First Published Dec 13, 2020, 4:08 PM IST

இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் என்று கூறப்பட்ட நிலையில் நேற்று ஜித்தன் ரமேஷ் வீட்டை விட்டு வெளியேறினார். இதையடுத்து இன்று வெளியேறப்போகும் மற்றொரு போட்டியாளர் யார் என்பது குறித்த தகவல்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.

70 நாட்களை கடந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சம்யுக்தா, சுசித்ரா, சனம் ஷெட்டி என 6 பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
undefined
இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் இருப்பதாக ஏற்கனவே கமல் ஹாசன் தெரிவித்தார். தற்போது 12 போட்டியாளர்கள் மீதமிருந்த நிலையில் நேற்று ஜித்தன் ரமேஷ் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற உள்ளது யார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.
undefined
தற்போதை பட்டியலின் படி பார்த்தால் சோம் சேகர், ரம்யா பாண்டியன், கேப்ரில்லா, ஷிவானி, அறந்தாங்கி நிஷா ஆகிய 5 பேர் உள்ளனர்.
undefined
நேற்று நிஷாவிற்கும், ஜித்தன் ரமேஷுற்கும் தான் ஆண்டவரின் அர்ச்சனை பலமாக இருந்தது. இருவரது பொறுப்பற்ற செயல்களையும் சுட்டிக்காட்டி சரமாரியாக வெளுத்து வாங்கினர்.
undefined
அதன் பின்னர் ஜித்தன் ரமேஷ் எவிக்‌ஷன் செய்யப்பட்டார். சற்று நேரத்திற்கு முன்பு வெளியான புரோமோ வீடியோவில் கூட நிஷாவின் முகம் தான் மிகவும் கலக்கமாக காணப்பட்டது.
undefined
மேலும் கடந்த சில வாரங்களாகவே நிஷா தான் வெளியேறுவார் என சோசியல் மீடியாவில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வந்தனர். நிஷா ரியோ அண்ட் ஜித்தன் ரமேஷை மட்டுமே என்டர்டெயிண்ட் செய்வதாகவும், மொக்கை ஜோக் சொல்லி கடுப்பேற்றுவதாகவும் கூறி வந்தனர்.
undefined
இந்நிலையில் ஜித்தன் ரமேஷுக்கு அடுத்ததாக நிஷா தான் இந்த வாரம் கண்டிப்பாக வெளியேறுவார் என்றும், இந்த வாரம் நிஷா மிகவும் குறைவான வாக்குகளையே பொற்றுள்ளதால் அவர் வெளியேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்து வருகின்றனர்.
undefined
click me!