மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்... ‘டிக்-டாக்’ சூர்யாவை மடக்கிப் பிடித்த தனிப்படை போலீசார்...!

First Published Dec 9, 2020, 7:24 PM IST

சினிமா வாய்ப்பிற்காக அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்டு வந்த சூர்யா சமீபத்தில் பார்த்த கேவலமான வேலையில் கையும் களவுமாக  சிக்கி, தற்போது கம்பி எண்ணி வருகிறார். 

டிக்-டாக் வீடியோக்கள் ஒருகாலத்தில் கொடிகட்டி பறந்த காலத்தில் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானவர் சூர்யா. பலரும் இவரை டிக்-டாக் சூர்யா என அழைக்கும் அளவிற்கு இவரது வீடியோக்கள் ரொம்ப பிரபலம்.
undefined
டைட் டி-ஷர்ட், குட்டை டவுசருடன் படு ஆபாசமாக நடனமாடியதாலும், டிக்-டாக் பிரபலம் ஜி.பி.முத்துவுடன் இரட்டை அர்த்த பாடல்களுக்கு டூயட் வீடியோ வெளியிட்டதாலும் டிக்-டாக் வாசிகளிடம் மிகவும் பிரபலமானார்.
undefined
தற்போது டிக்-டாக் செயலி தடை செய்யப்பட்டுள்ளதால் டிக்-டாக் வாசிகள் பலரும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ பக்கம் சென்றுவிட்டனர்.
undefined
ஆனால் சினிமா வாய்ப்பிற்காக அரைகுறை ஆடையில் ஆட்டம் போட்டு வந்த சூர்யா சமீபத்தில் பார்த்த கேவலமான வேலையில் கையும் களவுமாக சிக்கி, தற்போது கம்பி எண்ணி வருகிறார்.
undefined
திருச்சியில் இயக்கி வரும் சில மசாஜ் சென்டர்களில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தப்படுவதாக தகவல்கள் கிடைத்தது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 20க்கும் மேற்பட்ட பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
undefined
அதேபோல் திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் தில்லை நகர், உறையூர், கே.கே.நகர் ஆகிய பகுதிகளில் உள்ள மசாஜ் சென்டர்களில் விபச்சார தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் திடீர் சோதனையில் இறங்கினர்.
undefined
அப்படி திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் 10க்கும் மேற்பட்ட பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். அந்த கூட்டத்தில் டிக்-டாக் சூர்யாவும் சிக்கியுள்ளார்.
undefined
ஆனால் தான் விபச்சாரத்தில் ஈடுபடவில்லை என்றும், தனக்கும் இந்த ஸ்பாவிற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் டிக்-டாக் சூர்யா மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் சூர்யாவிடம் தனிப்படை போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
undefined
click me!