ஏன் சித்து இப்படியொரு முடிவெடுத்த?... சித்ராவின் மறைவால் துடிதுடிக்கும் திரைப்பிரபலங்கள்...!

First Published Dec 9, 2020, 5:51 PM IST

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை விஜே சித்ராவின்  தற்கொலை செய்தியில் அவருடைய ரசிகர்கள் மீளாத நிலையில், வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை நடிகர், நடிகைகள் பலரும் தங்களது வருத்தத்தையும், இரங்கலையும் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். 

நடிகை சித்ராவின் மரணம் அதிர்ச்சி, வருத்தமளிக்கிறது. நம்பிக்கைகுரிய, திறமையான நடிகை நம்மை விட்டு விரைவில் சென்றுவிட்டார். தற்கொலை என்பது பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வல்ல என்பதை மக்கள் உணர வேண்டும், ஒரு சமூகமாக, இந்த உண்மையை முன்பை விட வலுவாக வலியுறுத்த வேண்டும்! என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
undefined
இந்த செய்தி இதயத்தை உடைக்கும் பேரதிர்ச்சி. இது எல்லாம் வெறும் பொய் என்று சொல்லும் படியான ஒரு போன் காலை அவளிடம் இருந்து நான் இன்னும் எதிர்பார்க்கிறேன். ஏன், ஏன், ஏன் என் தோழியே ஏன்?.... நீ ஒரு தேவதை பேபி என பிக்பாஸ் புகழ் அபிராமி சோகத்தை பகிர்ந்துள்ளார்.
undefined
விஜய் தொலைக்காட்சியின் பிரபல நடிகையான மைனா நந்தினி. ஏன்டி இப்படி பண்ண? RIP என்றும், குக் வித் கோமாளி புகழ் எதுக்கு இப்படி பண்ண மச்சி என்றும் தங்களது சோகத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
undefined
உண்மையிலேயே அதிர்ச்சியாக இருக்கு சித்து... நீங்கள் எவ்வளவு தைரியமானவர் மற்றும் வலிமையானவர் என்பது எனக்குத் தெரியும், ஆனால் இந்த முடிவை எடுக்க உங்களைத் தூண்டியது என்னவென்று எனக்குத் தெரியவில்லை .. நேற்று அதே மேக் அப் அறையில் இருந்தோம், நிறைய விஷயங்களைப் பற்றி பேசினோம். ஆனால் இன்று ஒரு மோசமான செய்தியுடன் எழுந்திருக்கிறேன் ... நீங்கள் இல்லை என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை என விஜே மணிமேகலை பதிவிட்டுள்ளார்.
undefined
நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில், “நேரம் இதைப் பற்றி நாம் மீண்டும் பேசுகிறோம். வாழ்க்கை மிகவும் விலைமதிப்பற்றது. அதை முடித்துக் கொள்ளும் முன்பு அவர் யாரிடமாவது பேசியிருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். உங்களுக்குள் நடக்கும் போர், அதைப்பற்றி தயவு செய்து வெளியில் பேசுங்கள்.. அது நிச்சயம் உங்களுக்கு உதவும். ஒரு முடிவை மாற்ற ஒரு விநாடி போதும்” என ட்வீட் செய்துள்ளார்.
undefined
“ஏன் இப்படியொரு மோசமான விஷயத்தை இவ்வளவு சீக்கிரம் செய்ய முடிவெடுத்தீர்கள். நீங்கள் இப்போது இருக்கும் இடத்திலாவது அமைதியை கண்டுபிடித்திருப்பீர்கள் என நம்பிகிறேன். எவ்வளவு ஆளுமை மிக்க, வசீகரிக்கும் நபர். இதை நீங்கள் செய்வதற்கு முன்னாள் யாரிடமாவது பேசியிருக்கலாம். ஒருவேளை அது இந்த விஷயத்தையே மாற்றி இருக்கும்” என பிக்பாஸ் புகழ் சாக்‌ஷி அகர்வால் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
undefined
நாம் எப்போதும் சந்தித்தது இல்லை... ஆனால் உங்களுடைய வளர்ச்சியையும், மக்கள் உங்கள் மீது வைத்திருக்கும் அபரிமிதமான அன்பையும் கவனித்திருக்கிறேன். எந்த வலி அன்புக்குரியவர்களை எல்லாம் விட்டுவிட வைத்தது. இப்படியொரு முடிவுக்கு உங்களை தள்ளிய வலியை என்னால் நினைத்து பார்க்க முடியவில்லை. என விஜே அஞ்சனா பதிவிட்டுள்ளார்.
undefined
click me!