புயல் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!

Published : Nov 30, 2024, 11:38 AM IST

புயல் காரணமாக இன்று திரையரங்குகள் இயங்குமா? இயங்காதா? என்பது குறித்த முக்கிய அறிவிப்பை திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

PREV
14
புயல் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!
Fengal Strome

தமிழக பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஃபெஞ்சல், புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் காலையில் இருந்தே மழை கொட்டி தீர்த்து வருகிறது. மேலும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், போன்ற மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதால் ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 

24
School are Leave

இந்நிலையில் புயல் இன்று பகல் நேரத்தில் மாமல்லபுரம் - புதுவை இடையே கரையை கடக்கும் என்று கூறப்படுவதால், சுமார் 90 கிலோ மீட்டர் வேகத்தில் தரைக்காற்று வீசப்படும் என்றும், பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால், கடற்கரையை ஒட்டி வசிப்பவர்கள், குடிசை வீடுகளில் வசிப்பவர்கள், மற்றும் பாதுகாப்பற்ற இடங்களில் வசிப்பவர்கள் அனைவரும் பத்திரமான இடங்களுக்கு அப்புறப்படுத்தி வருகிறது தமிழக அரசு.

'சொர்க்கவாசல்' ஆர்.ஜே.பாலாஜியை வரவேற்றதா? வெளியானது முதல் நாள் வசூல் விவரம்!

34
Heavy Rain and Red Alert

புயல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதோடு, மோசமான வானிலை காரணமாக விமான சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பேருந்து சேவைகள் புயல் மற்றும் மழையின் தாக்கத்தை பொறுத்து நிறுத்தப்படும் என நேற்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
 

44
Theaters Closed

இந்நிலையில் மக்களின் பாதுகாப்பு கருதி , திரையரங்குகள் உரிமையாளர்கள் புயல் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் திரையரங்குகள் மூடப்படும் என தெரிவித்துள்ளனர். டிக்கெட் முன் பதிவுகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

நயன்தாரா முதல் மஞ்சு வாரியர் வரை; அதிகம் சம்பளம் வாங்கும் 7 தென்னிந்திய நடிகைகள்!
 

click me!

Recommended Stories