அதே நேரம், திடீர் என நேற்று முன்தினம் மாலை ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து நேற்று கூறி இருந்த சௌந்தர்யா ரஜினிகாந்த், அப்பாவின் உடல்நிலை தேறி வருகிறது. கடவுள் அருளாலும், அனைவரின் பிரார்த்தனையாலும் அப்பா நன்றாக உள்ளார். அதே நேரத்தில் புனித் ராஜ்குமார் மரண செய்தியால் மனம் இரண்டாக உடைந்துவிட்டது, அவரது ஆன்மா சாந்தி அடையட்டும் என்று தெரிவித்திருந்தார்.