ஜெயிலர் திரைப்படம் உருவாக முக்கிய காரணமாக இருந்ததே விஜய் தான். பீஸ்ட் ஷூட்டிங்கின் போது, ரஜினிக்கு கதை சொல்லுமாறு நெல்சனுக்கு ஊக்கம் அளித்து அவரை அனுப்பி வைத்ததே விஜய் தானாம். இதை நெல்சனே ஜெயிலர் ஆடியோ லாஞ்சில் கூறி இருந்தார். அதுமட்டுமின்றி, எப்பவும் காலையில் லேட் ஆக எழுந்திருக்கும் நெல்சனை, ஜெயிலர் படத்தின் முதல்நாள் ஷூட்டிங்கிற்கு போன் போட்டு எழுப்பிவிட்டதே தளபதி தான்.