தற்போது அந்த கட்சியில் இருந்தும் விலக முடிவெடுத்துள்ள ஜெயசுதா, விரைவில் பாஜகவில் இணைய உள்ளாராம். அண்மையில் ஆந்திர மாநில பாஜக தலைவர் ஜி கிஷன் ரெட்டியை இதுதொடர்பாக சந்தித்து பேசி இருக்கிறார் ஜெயசுதா. அந்த சந்திப்பின் போது தான் பாஜகவில் இணைந்தால் செகண்ட்ராபாத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற நிபந்தனையையும் முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.