பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன், நண்பன் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் அட்லீ. இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானார். முதல்படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த அட்லீ, அடுத்தடுத்து கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் விஜய் படங்கள்.
ராஜா ராணி படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என ஹாட்ரிக் ஹிட் படங்களைக் கொடுத்தார் அட்லீ. இதன்மூலம் குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் லிஸ்ட்டிலும் இணைந்தார். இதன்பின்னர் அட்லீக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு தான் ஷாருக்கானின் ஜவான் படம். இப்படம் மூலம் பாலிவுட்டில் இயக்குனராக எண்ட்ரி கொடுத்துள்ளார் அட்லீ.