மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பி மனைவி மற்றும் மகனை சந்தித்த தமிழக பாஜக தலைவர் முருகன்!

First Published Feb 2, 2021, 12:36 PM IST

சமீபத்தில் இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருது, மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு வழங்கப்பட்ட நிலையில், எஸ்.பி.பியின், குடும்பத்தினரை  தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் மற்றும் பாஜக பிரமுகர் நடிகை குஷ்பு இருவரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
 

மத்திய அரசு, கடந்த 1954ம் ஆண்டு முதல் சாதனைகள் படைத்தவர்களுக்கு பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகிய விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. இவை பொதுவாக பத்ம விருதுகள் என்று அழைக்கப்படுகின்றன. கலாச்சாரம், இசை, நடனம், ,அரசியல், சமூகம், நிர்வாகம், கலை, சினிமா, நாடகம், ஓவியம், சிற்பம், சட்டம், நீதி, பொது சேவை சமூக நலம் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்த முறையில் பங்காற்றியவர்களைக் கண்டறிந்து ஆண்டுதோறும் இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
undefined
இதில், இந்தாண்டு பத்ம விபூஷன் விருதுகள்7 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்களுக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்படுகிறது. பத்ம பூஷன் 10 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ 102 பேருக்கு வழங்கப்படுகிறது. அதில் மொத்தம் தமிழகத்தை சேர்ந்த 11 பேருக்கு விருது கிடைத்துள்ளது.
undefined
இதற்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தமிழக பாமக தலைவர் எல்.முருகன், மாறும் பாஜக பிரமுகர் நடிகை குஷ்பு ஆகியோர், எஸ்.பி.பி மனைவி சாவித்திரி, மகன் S.P.B.சரண் ஆகியோர்களை நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
undefined
இதற்க்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக தமிழக பாமக தலைவர் எல்.முருகன், மாறும் பாஜக பிரமுகர் நடிகை குஷ்பு ஆகியோர், எஸ்.பி.பி மனைவி சாவித்திரி, மகன் S.P.B.சரண் ஆகியோர்களை நேரில் சந்தித்து, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
undefined
இதுகுறித்த புகைப்படங்களை நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, எஸ்.பி.பி ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
undefined
click me!