3டி தொழில்நுட்பத்தில் சியான் படம் ! ரஞ்சித் - விக்ரம் கூட்டணியின் சூப்பர் அப்டேட் இதோ!

Published : Jul 02, 2022, 02:20 PM IST

18-ம் நூற்றாண்டில் நடைபெறும் கதை களத்தை கொண்டுள்ள இந்த படம் 3டி தொழில் நுட்பத்தில் உருவாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
14
3டி தொழில்நுட்பத்தில் சியான் படம் ! ரஞ்சித் - விக்ரம் கூட்டணியின் சூப்பர் அப்டேட் இதோ!
actor vikram

சீயானுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஏழு பிலிம்பேர் விருதுகள்,  தேசிய திரைப்பட விருது மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளை குவித்துள்ள இவர் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர்.

என் காதல் கண்மணி திரைப்படத்தில் அறிமுகமான இவர் வாழ்வில் திரும்பு முனையை ஏற்படுத்திய படம் சேது. இந்த படத்திற்கு பிறகே சீயான் என அறியப்படுகிறார் விக்ரம். இதில் விக்ரமின் நடிப்பு அவருக்குள் இருக்கும் ஒரு விஸ்வரூபத்தை வெளிக்கொணர்ந்து திரையுலகில் பிரளயத்தை கொணர்ந்தது. இந்த படம் பாலாவின் இயக்கத்தில் உருவானதாகும். 

மேலும் செய்திகள்... 2 முறை விவாகரத்து பெற்ற நடிகையுடன் 4-வது திருமணமா? - உண்மையை போட்டுடைத்த 60 வயது நடிகர்

24
vikram

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனக்கென மாற்று பாதையை அமைத்து கொண்ட விக்ரம் ஆக்சனிலும் சென்டிமென்டிலும் கலக்கினார். காசி படம் இன்றளவும் மன நெகிழ்ச்சியை உருவாக்கும் ஏழையாகவே இருந்து வருகிறது. இதையடுத்து பிதாமகன் விகாரமின் மற்றுமொரு மைல் கல்லாக அமைந்து பிரமிக்க வைத்தது. இதுவும் பாலாவின் இயக்கமே. இத்திரைப்படத்தில் விக்ரம்- சூர்யா இருவரும் நடிப்பால் நெகிழ செய்தனர்.

மேலும் செய்திகள்... Ponniyin selvan : வருகிறான் சோழன்... மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ பட அப்டேட் வந்தாச்சு

34
vikram

அந்நியனின் தனது மொத்த தைராமியையும் இறக்கிய சீயான். இருமுகன், ஐ, சாமி ஸ்கொயர் என அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்தார். ஆனால் இறுதியாக விக்ரம் மாற்றும் அவரது மகன் துரு விக்ரம் நடித்த மஹான் போதுமான வரவேற்பை பெறவில்லை. தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா, பா. ரஞ்சித்துடன் புதிய திட்டம் உள்ளிட்டவற்றில் இணைந்துள்ளார் விக்ரம்.
 

மேலும் செய்திகள்...பட வாய்ப்புகள் குறைந்ததால்...மீண்டும் அண்ணனுடன் 2-ம் பாகத்தில் இணைய திட்டமிட்ட ஜெயம் ரவி!

44
vikram pa ranjith

இந்நிலையில் தனி ஒரு பாணியில் படம் இயக்கம் பா.ரஞ்சித் உடனான விக்ரம் படத்தில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது 18-ம் நூற்றாண்டில் நடைபெறும் கதை களத்தை கொண்டுள்ள இந்த படம் 3டி தொழில் நுட்பத்தில் உருவாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை ரசிகர்கள் எதிர் நோக்கி காத்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories