சீயானுக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஏழு பிலிம்பேர் விருதுகள், தேசிய திரைப்பட விருது மற்றும் தமிழ்நாடு மாநில திரைப்பட விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது உள்ளிட்ட விருதுகளை குவித்துள்ள இவர் தமிழ் சினிமாவில் மிக பிரபலமான நடிகர்களில் ஒருவர்.
என் காதல் கண்மணி திரைப்படத்தில் அறிமுகமான இவர் வாழ்வில் திரும்பு முனையை ஏற்படுத்திய படம் சேது. இந்த படத்திற்கு பிறகே சீயான் என அறியப்படுகிறார் விக்ரம். இதில் விக்ரமின் நடிப்பு அவருக்குள் இருக்கும் ஒரு விஸ்வரூபத்தை வெளிக்கொணர்ந்து திரையுலகில் பிரளயத்தை கொணர்ந்தது. இந்த படம் பாலாவின் இயக்கத்தில் உருவானதாகும்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தனக்கென மாற்று பாதையை அமைத்து கொண்ட விக்ரம் ஆக்சனிலும் சென்டிமென்டிலும் கலக்கினார். காசி படம் இன்றளவும் மன நெகிழ்ச்சியை உருவாக்கும் ஏழையாகவே இருந்து வருகிறது. இதையடுத்து பிதாமகன் விகாரமின் மற்றுமொரு மைல் கல்லாக அமைந்து பிரமிக்க வைத்தது. இதுவும் பாலாவின் இயக்கமே. இத்திரைப்படத்தில் விக்ரம்- சூர்யா இருவரும் நடிப்பால் நெகிழ செய்தனர்.
அந்நியனின் தனது மொத்த தைராமியையும் இறக்கிய சீயான். இருமுகன், ஐ, சாமி ஸ்கொயர் என அடுத்தடுத்த வெற்றிகளை கொடுத்தார். ஆனால் இறுதியாக விக்ரம் மாற்றும் அவரது மகன் துரு விக்ரம் நடித்த மஹான் போதுமான வரவேற்பை பெறவில்லை. தற்போது பொன்னியின் செல்வன், கோப்ரா, பா. ரஞ்சித்துடன் புதிய திட்டம் உள்ளிட்டவற்றில் இணைந்துள்ளார் விக்ரம்.
இந்நிலையில் தனி ஒரு பாணியில் படம் இயக்கம் பா.ரஞ்சித் உடனான விக்ரம் படத்தில் புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது 18-ம் நூற்றாண்டில் நடைபெறும் கதை களத்தை கொண்டுள்ள இந்த படம் 3டி தொழில் நுட்பத்தில் உருவாக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை ரசிகர்கள் எதிர் நோக்கி காத்துள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.