மேல் சிகிச்சைக்காக சென்னையிலிருந்து வெளிநாடு அழைத்து செல்லப்பட்ட டி.ஆர்.

Kanmani P   | Asianet News
Published : Jun 08, 2022, 06:43 PM IST

திடீர் நெஞ்சு வலி மற்றும் வயிற்றில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக தனது தந்தைக்கு சென்னையில்  சிகிச்சை பெற்று வந்த டி.ராஜேந்தர் மேல் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளார்.

PREV
13
மேல் சிகிச்சைக்காக சென்னையிலிருந்து வெளிநாடு அழைத்து செல்லப்பட்ட டி.ஆர்.
T Rajendar

திரையுலக பிரபலமான டி. ராஜேந்தர் சமீபகாலாமா மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. மற்ற இரு பிள்ளைகளும் குழந்தை குட்டியுடன் செட்டில் ஆனா நிலையில் தனது மூத்த மகனும் சிஷ்யனுமான சிம்புவுக்கு திருமணம் ஆகாதது குறித்து  கவலையில் இருந்துள்ளார். இதற்கென கோவில், பூஜை  என தனது மனைவியுடன் சுற்றி வந்தார் டி.ஆர்.

23
T Rajendar

இந்நிலையில் இவருக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். பின்னர் ஓரளவில் தெரிய இவரை நேரில் சந்தித்து தமிழக முதல்வர் நலம் விசாரித்தார்.  தனது தனியின் உடல் நலம் குறித்து அறிக்கை வெளியிட்ட சிம்பு, டீர் நெஞ்சு வலி மற்றும் வயிற்றில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக தனது தந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும். மேல்  சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

33
T Rajendar

இதையடுத்து சென்னை போரூர் ராமசந்திர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டி. ராஜேந்தர் அவர்களை நேற்று நள்ளிரவு அமெரிக்கா அழைத்து சென்றுள்ளனர். மேல் சிகிச்சைக்காக சென்றுள்ள இவருடன் அவரது மனைவி உஷா ராஜேந்தரன், பிள்ளைகள் சிம்பு, குறளரசன், மகள் இலக்கிய உள்ளிட்டோர் சென்றுள்ளனர். நியூயார்க்கில் உள்ள புரூக்ளின்  மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories