கேரளாவில் கடந்த 1973ம் ஆண்டு பிறந்து, சென்னையில் கடந்த 2010ம் ஆண்டு வெறும் 37 வயதில் காலமான பாடகி தான் சுவர்ணலதா. இந்திய திரை உலகில் எத்தனையோ பாடகிகள் தங்களுடைய மிகச்சிறந்த குரலால் ரசிகர்களை ஈர்த்த நிலையில், முற்றிலும் மாறுபட்ட, ஜீவன் பொங்கி வழியும் அற்புதமான குரலை கொண்ட ஒரு பாடகி என்றால் அது சுவர்ணலதா மட்டுமே என்றால் அது சற்றும் மிகையல்ல. தனது 14 வது வயதில் திரைத்துறையில் பாட தொடங்கிய சுவர்ணலதா, 22 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது, பெங்காலி, ஒரியா, பஞ்சாபி மற்றும் படுகா என்று பத்து மொழிகளில் பத்தாயிரம் பாடல்களை பாடி இந்த உலகம் இருக்கும் வரை தன் குரலால் உயிரோடு இருக்கும் ஒரு மிகச் சிறந்த பாடகியாக மாறினார்.
ஸ்வர்ணலதாவின் தாய்க்கும் இசை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக, தன் மகளிடமிருந்து தனித்துவமான அந்த திறமையை வெளிக்கொணர சென்னைக்கு, கேரளாவில் இருந்து குடிபெயர்ந்தனர். முதல் முதலில் 1987ம் ஆண்டு எம்.எஸ் விஸ்வநாதன் இசையில், வெளியான "நீதிக்கு தண்டனை" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் பாடகியாக ஸ்வர்ணலதா பாடகியாக அறிமுகமானார்.
அஜித் நடத்திய விதம்... ரஜினி மற்றும் கமல் தான் என் டார்கெட்! பாலிவுட் நடிகர் விவேக் ஓப்ராய் ஓப்பன் டாக்!