சுஷாந்த் வீட்டுக்கு அழுதபடி வந்த 6 வருட காதலி..! போலீசார் விசாரணை நடத்தியதால் பரபரப்பு?

First Published Jun 16, 2020, 9:30 PM IST

தோனி பட நடிகர், சுஷாந்த் சிங் தற்கொலை ஒட்டு மொத்த திரையுலகினரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இவருடைய தற்கொலைக்கு காரணம் மன அழுத்தம் என கூறப்பட்டு வரும் நிலையில், இவர் 6 வருடம் உயிருக்கு உயிராக காதலித்த நடிகை அங்கிதா லோகண்டே நேற்று சுஷாந்த் மறைவுக்கு நேரில் வர முடியாததால் இன்று அவருடைய வீட்டிற்கு வந்து அஞ்சலி செலுத்தியுள்ளார்.
 

கடந்த 2009 ஆம் ஆண்டு, நடிகர் சுஷாந்த் சிங் நடிகை அங்கிதா லோகண்டேவுடன் 'பவித்ரா ரிஷ்ட்டா' என்கிற சீரியலில் நடித்த போது, அங்கீதாவை காதலிக்க துவங்கினார்.
undefined
6 வருடம் உயிர்க்கு உயிராக காதலித்து வந்த இவர்கள், கடந்த 2016 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக தங்களுடைய உறவை முறித்து கொண்டனர்.
undefined
இதை தொடர்ந்து சுஷாந்த் தன்னுடைய முழு கவனத்தையும் திரைப்படங்கள் நடிப்பதில் செலுத்தினர். அங்கிதா விக்கி ஜெயின் என்பவரை காதலிக்க துவங்கினார்.
undefined
சுஷாந்த் நடிகை ரியா சக்ரபோர்த்தியை காதலிப்பதாக கூறப்பட்ட போதிலும் அதனை இதுவரை இருவருமே வெளிப்படையாக அறிவித்தது இல்லை. நண்பர்களாக மட்டுமே பழகி வருவதாக தெரிவித்து வந்தனர்.
undefined
இந்நிலையில் சுஷாந்த் திடீர் என இப்படி ஒரு முடிவை எடுத்ததால் இவருடைய முன்னாள் காதலி உட்பட பலரும் அதிர்ச்சியடைந்தனர்.
undefined
சுஷாந்தின் இறுதி சடங்கில் 20 நபர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி அளிக்கபப்ட்டதால், அங்கிதாவால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் அதனால் இன்று, பாந்த்ராவில் உள்ள சுஷாந்தின் வீட்டில் இவர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
undefined
இவர் அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் ஊடகங்கள் இவரிடம் பேட்டி எடுக்க முற்பட்ட போது பேட்டி கொடுக்க மறுத்து விட்டார் அங்கிதா
undefined
அதே நேரத்தில், அங்கிதாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
undefined
click me!