இந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர், அதன் பின்னர் தமிழில்‘வெடி’,‘அசல்’,‘வேட்டை’ என சில படங்களில் நடித்தார். அதன் பின்னர் படவாய்ப்புகள் குறைந்தது.
அதன் பின்னர் படங்களில் நடிப்பதையே முற்றிலும் தவிர்த்துவிட்டார். ஏற்கனவே ஒரு மகனுக்கு தாயாக இருந்த சமீராவுக்கு, இரண்டாவது குழந்தையும் பிறந்தது.
கர்ப்பமாக இருக்கும் போது மிகவும் போல்டாக நீருக்கு அடியில் கவர்ச்சி போஸ் கொடுத்து சோசியல் மீடியாவை அதிரவைத்தார்.
போட்டோ ஷூட்டில் மட்டும் மிகவும் போல்ட் அல்ல நிஜத்திலும் சமீரா ரெட்டி போல்டான பெண்மணி தான். சமீபத்தில் கூட இதனை நிரூபிக்கும் விதமாக தன்னுடைய வெள்ளை முடிகளை காரைக்காததற்கு அவரது தந்தைக்கு பதில் கொடுப்பதுபோல் இவர் போட்ட பதிவு பாராட்டுகளை குவித்தது.
மேலும் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், தன்னுடைய குடும்பத்துடன் எடுத்து கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
கணவருடன் கொஞ்சலான ரொமான்ஸில் இவர் வெளியிடும் புகைப்படங்களை ரசிகர்கள் அதிகம் ரசிப்பதோடு தங்களுடைய லீக்குகளையும் குவித்து வருகிறார்கள்.
அந்த வகையில் பிகினி ஹாட்... கணவர் மடியில் அமர்ந்து வெளியிடும் புகைப்படங்கள் வேற லெவலுக்கு பார்க்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, ஹீரோயினாக இருந்த போது காட்டாத கவர்ச்சியை கூட, சமீப காலமாக சமீரா ரெட்டி மிகவும் போல்டாக காட்டி வருகிறார் என்பது போன்ற விமர்சனங்களும் ஒரு பக்கம் பறக்கிறது.