பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகளும், நடிகையுமான வனிதா கடந்த ஜூன் மாதம் 27 ஆம் தேதி, திரையுலகை சேர்ந்த தொழில் நுட்ப கலைஞர், பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்து, அதன் படி திருமணமும் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் எளிமையான முறையில், வனிதாவின் வீட்டில் நடந்து முடிந்தது.
undefined
தன்னுடைய இரு மகள்களில் அனுமதியோடு திருமணம் செய்து கொண்ட வனிதா, திருமணத்தில் அவருடைய நெருங்கிய நண்பர்கள் மற்றும், நடிகை அம்பிகா போன்ற பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
undefined
இதையடுத்து, திருமணம் ஆன மறுதினம் வனிதா திருணம் செய்துகொண்டுள்ள பீட்டர் பாலின் முதல் மனைவி பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார். 7 வருடமாக கணவரை விட்டு விலகி வாழ்ந்தாலும், நான் இன்னும் அவரை விவாகரத்து செய்ய வில்லை, தன்னுடைய பிள்ளைகளுக்காவது பீட்டர் பால் மீண்டும் தன்னுடைய சேர்ந்து வாழ வேண்டும் என தெரிவித்தார்.
undefined
இந்த பிரச்சனை குறித்து பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், தயாரிப்பாளர் ரவீந்திரன், சூர்யா தேவி போன்ற சிலர் வனிதாவை தாறுமாறாக விமர்சிக்க துவங்கினர்.
undefined
ஆரம்பத்தில் வனிதா இதனை கண்டுகொள்ள வில்லை என்றாலும், அவருடைய லாயர் முதல் கொண்டு விமர்சிக்க துவங்கியதால், நேற்றைய முன் தினம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து, ரவீந்திரன் மற்றும் சூர்யா தேவி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
undefined
இந்நிலையில் இந்த சூர்யா தேவி கஞ்சா விற்கும் பெண் என பரபரப்பு ஆடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் வனிதாவின் லாயர்.
undefined
இதை தொடர்ந்து சூர்யா தேவிக்கு பின்னணியில் நாஞ்சில் விஜயன் இருப்பதும் தெரிய வந்ததாக கூறி சில பேட்டிகளும் கொடுத்து வருகிறார்.
undefined
இந்நிலையில் நாஞ்சில் விஜயன் மற்றும் சூர்யா தேவி இருவரும், ரோபோ ஷங்கருடன் எடுத்துக்கொண்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
undefined