பாலாவுடன் பிரச்சனை.. சிவாவுடன் விரைவில் இணையும் சூர்யா...எப்ப சூட்டிங் தெரியுமா?

First Published May 24, 2022, 5:15 PM IST

சூர்யா 41-ல் தற்போது கமிட்டாகியுள்ள சூர்யா விரைவில் சிவாவுடன் புதிய திட்டத்தில் இணைவார் என தெரிகிறது.

suriya

நடிகர் சூர்யா கடைசியாக நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ தற்போது பாலா இயக்கத்தில் 'சூர்யா 41' என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார் . இதற்கிடையில், இயக்குனர் சிவாவுடன் சூர்யாவின் அடுத்த படம் குறித்த புதிய அப்டேட் வந்துள்ளது. 'சிறுத்தை' சிவாவுடன் சூர்யா பணியாற்றுவார் என்று முன்பு கூறப்பட்டது, தற்போது 'சூர்யா 42' படத்தை சிவா இயக்குவார் என்று கூறப்படுகிறது.

suriya 41

முன்னதாக சூர்யா பாலாவின் படத்திற்கான ஷூட்டிங் ஷெட்யூலை ஜூன் மாதத்தில் முடித்துவிடுவார் என்றும், வெற்றிமாறனின் ' வாடிவாசல் ' படத்தின் சோதனைப் படப்பிடிப்பை ஜூலை மாதம் தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் சிவாவை வைத்து படத்திற்கான வேலைகளையும் தொடங்கவுள்ளார்.

director siva image

 ஜூலையில் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும், 'பாகுபலி' மற்றும் 'கேஜிஎஃப் 2' அளவில் இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படம் ஒரு வரலாற்று கற்பனைக் கதை என்றும் இரண்டு பாகங்கள் கொண்டதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பாலாவுடனான பிரச்சனை காரணமாக சூர்யா 41 பாதியில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. 

suriya in vikram

அதோடு கமல் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் படத்தில் காமியோ ரோலில் வந்துள்ள சூர்யா நாயகனின் வாரிசாக வருவதாகவும் விக்ரம் மூன்றாம் பாகத்தில் சூர்யா நாயகனாக நடிக்கவுள்ளார் என்றும் பேசப்படுகிறது. இதில் எந்த படத்தில் சூர்யா இணைவார் என விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

click me!