தன்னுடைய கணவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என, கடைசி வரை சந்துரு என்கிற வழக்கறிஞரின் உதவியோடு செங்கேணி போராடுகிறார். இந்த வழக்கில் செங்கேணி வெற்றியும் பெறுகிறார். இந்த படத்தில் ராஜா கண்ணு கதாபாத்திரத்தில் மணிகண்டன் நடித்திருந்த நிலையில், செங்கேணியாக லிஜோ மோல் நடித்திருந்தார். வழக்கறிஞர் சந்துரு கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், எம்எஸ் பாஸ்கர், ஜெயப்பிரகாஷ், இளவரசு, சுஜாதா, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.