தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் தன்னுடைய முதல் படத்தை இயக்கி வருவது அனைவரும் அறிந்ததே. சஞ்சைக்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த போதும் கூட, தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்பதை வெளிப்படையாக கூறிவிட்டு, தாத்தாவை போலவே திரைப்படம் இயக்க தயாரானார். சினிமா சம்மந்தமாக லண்டனில் தன்னுடைய படிப்பை முடித்த கையேடு, படத்தின் கதையை எழுதி அதை லைகா நிறுவனத்திடம் கூற, அவர்களும் இந்த படத்தை தாங்களே தயாரிப்பதாக ஒப்புக்கொண்டனர்.