சூர்யா 45 - களத்தில் இறங்கி மாஸ் காட்டப்போகும் இயக்குனர் யார் தெரியுமா?

Ansgar R |  
Published : Sep 23, 2024, 10:30 PM ISTUpdated : Sep 24, 2024, 08:39 AM IST

Suriya 45 : நடிகர் சூர்யாவின் "கங்குவா" திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், சூர்யா 45 படத்தின் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

PREV
14
சூர்யா 45 - களத்தில் இறங்கி மாஸ் காட்டப்போகும் இயக்குனர் யார் தெரியுமா?
Kanguva Movie

பிரபல நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் "கங்குவா". சூர்யாவின் திரை வரலாற்றிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்படும் படமாக இது அமைந்திருக்கின்றது. வருகின்ற நவம்பர் மாதம் 14ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. 

ஏற்கனவே அக்டோபர் 10ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவித்திருந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "வேட்டையன்" திரைப்படத்தோடு மோதாமல் இருக்க, மரியாதை நிமித்தமாக அந்த திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதியில் இருந்து பின்வாங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வருகின்ற நவம்பர் மாதம் 14ஆம் தேதி இந்த திரைப்படம் சோலோவாக வெளியாகும்.

ஒரே படத்தில் ஐம்பூதங்களை தீமாக வைத்து.. 5 பாடல்களை உருவாக்கிய ஏ.ஆர்.ரகுமான்!

24
Karna Movie

அதே சமயம் பாலிவுட் உலகில் பிரபல இயக்குனர் ஒருவர் இயக்கத்தில், "கர்ணா" என்ற படத்தில் நடிக்க நடிகர் சூர்யா ஒப்பந்தமாகி இருந்தார். இதிகாச கதையான அதில், கர்ணனுடைய கதாபாத்திரத்தை சூர்யா ஏற்று நடிப்பார் என்றும், பிரபல நடிகை ஜான்வி கபூர் அதில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிப்பார் என்றும் தகவல் வெளியானது. 

மேலும் இந்த திரைப்படத்திற்காக போஸ்ட் புரோடக்ஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், தற்பொழுது அந்த திரைப்படத்திலிருந்து சூர்யா விலகி உள்ளதாகவும், அந்த திரைப்படமும் கைவிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கல்கி திரைப்படத்தில் கர்ணன் கதாபாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ள நிலையில், அதேபோன்ற ஒரு கதையில் தான் நடிப்பது அவ்வளவு ஏற்புடையதாக இருக்காது என்று சூர்யா நினைத்ததாகவும், அதனால் தான் அந்த திரைப்படத்திலிருந்து அவர் விளங்கியதாகவும் கூறப்படுகிறது.

34
Vaadivasal

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனது 44வது திரைப்பட பணிகளை விறுவிறுப்பாக நடிகர் சூர்யா மேற்கொண்டு வருகிறார். அந்தமானில் இந்த திரைப்படத்திற்கான படபிடிப்பு பணிகள் நடந்த நிலையில், தொடர்ச்சியாக பல வெளிநாடுகளிலும், சென்னையிலும் அப்பட பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. 

இந்த சூழ்நிலையில் சூர்யா தனது 45வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் அட்லீயோடு இணைந்து நடிக்க உள்ளார் என்றும் சில தகவல்கள் வெளியான நிலையில், அவரது 45வது திரைப்படமாக வெற்றிமாறனின் வாடிவாசல் திரைப்படம் தான் வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் நேர் மாறாக ஒரு புதிய ட்விஸ்ட் ஒன்று ஏற்பட்டிருக்கிறது.

44
RJ Balaji

ஏற்கனவே நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கிய ஆர் ஜே பாலாஜி, அப்படத்தின் இரண்டாம் பாகத்தை த்ரிஷாவை வைத்து இயக்கப் போவதாக கூறப்பட்டது. அதன் பிறகு பிரபல வேல்ஸ் நிறுவனம் மூக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி இயக்குவார் என்று அதிகாரப்பூர்வமாகவே அறிவித்தது. 

இதற்கிடையில் தளபதி 69 திரைப்படத்திற்காக ஏற்கனவே ஒரு கதையை அவரிடம் ஆர்.ஜே பாலாஜி சொன்ன நிலையில், அந்த கதை நிராகரிக்கப்பட்டு தற்பொழுது எச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ள நிலையில், ஆர் ஜே பாலாஜி ஒரு புதிய கதையை உருவாகியுள்ளதாகவும், சூர்யா அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. ட்ரீம் வாரியார் நிறுவனம் அந்த படத்தை தயாரிக்கவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கோலிவுட்.. கடந்த வாரம் வெளியாகி மாஸ் காட்டிய 4 தமிழ் படங்கள் - ஆனா வெற்றி யாருக்கு?

Read more Photos on
click me!

Recommended Stories