அவர் பேசியதாவது: “அண்ணாத்த படத்துக்கு பின்னர் மிகப்பெரிய இடைவெளி ஆகிப்போச்சு. அதற்கு காரணம், என்னிடம் இயக்குனர்கள் சொன்ன கதை எதுவுமே திருப்தி அளிக்கல, எல்லாமே பாட்ஷா மாதிரியும், அண்ணாமலை மாதிரியும் இருந்துச்சு. நிறைய கதை கேட்டு ரிஜெக்ட் செய்ததால் ஒருகட்டத்தில் கதை கேட்பதையே நிறுத்திவிட்டேன்.
ஒருபடத்திற்கு இயக்குனர் தான் முக்கியம், தயாரிப்பாளர் அம்மா மாதிரினா, இயக்குனர் அப்பா மாதிரி. என்னுடைய கெரியரை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டுபோனது இயக்குனர்கள் தான். இதுவரை முத்துராமன், மகேந்திரன், சுரேஷ் கிருஷ்ணா, கே.எஸ்.ரவிக்குமார், ஷங்கர், ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ் அப்படி செய்தனர். தற்போது நெல்சன் என்னை அடுத்தகட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.
இதையும் படியுங்கள்... பிரமிக்க வைத்த 'ஜெயிலர்' ஆடியோ லான்ச் போட்டோஸ்! எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் தெரியுமா?