அடுத்ததாக நடிகர் நாகர்ஜுனா பற்றி பேசுகையில், நாகர்ஜுனா இந்த வயசுலையும் என்ன ஒரு கலராக இருக்கிறார். எனக்கு முடியெல்லாம் போயிடுச்சு. ஆனா உங்களோட பிட்னஸின் ரகசியம் என்ன என கேட்டேன். அதற்கு அவர், ஒன்னுமே இல்ல சார், உடற்பயிற்சி மட்டும் தான் காரணம்னு சொல்லிட்டார். அஜித்தின் மங்காத்தா படத்துல வெங்கட் பிரபு ஒரு டயலாக் வச்சிருப்பார். நானும் எவ்வளவு நாள் தான் நல்லவனாவே நடிக்கிறதுனு. அதற்கு ஏற்றார்போல் நாகர்ஜுனா நெகடிவ் ரோலில் அருமையாக நடித்திருக்கிறார்.
பழச மறக்காத ரஜினி
நான் கண்டக்டரா இருக்கும்போது என்னோட நண்பன் அவனோட தங்க செயின கொடுத்து நீ சினிமால நடினு சொன்னான். அதனால தான் நான் இங்கே இருக்கிறேன் என்று தன் நண்பர் ராஜ் பஹதூர் பற்றி பெருமிதத்துடன் கூலி ஆடியோ லாஞ்சில் பேசி இருந்தார் ரஜினிகாந்த்.
ரஜினி அட்வைஸ்
தொடர்ந்து பேசிய ரஜினி, உழைப்புக்கு மேல் என் வெற்றிக்கு ஒரு ரகசியம் உண்டு. அதுதான் இறைவனின் குரல். இறைவனின் குரலையும், உங்களின் குரலையும் பிரித்துப் பார்க்க கற்றுக் கொள்ள வேண்டும். எவ்வளவு பணம், புகழ் வந்தாலும் வீட்டில் நிம்மதி, வெளியில் கெளரவம் இல்லையெனில் எதுவுமே இல்லை என ரஜினிகாந்த் அறிவுரை கூறி இருக்கிறார்.