
கடந்த 2023ம் ஆண்டு பிரபாக இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி, உலக அளவில் சுமார் 640 கோடி ரூபாய் வசூல் செய்து மெகா ஹிட் திரைப்படமாக மாறியது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் "ஜெயிலர்" திரைப்படம். கடந்த 2023ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் மிகப்பெரிய வசூல் சாதனை செய்த திரைப்படமாக "ஜெயிலர்" மாறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த திரைப்பட பணிகளை முழுமையாக முடித்த கையோடு பல வருடங்களாக இமயமலைக்கு செல்லாமல் இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது தியானத்தை மேற்கொள்ள இமயமலைக்கு சென்றார்.
அதன் பிறகு வெளிநாடுகளுக்கும் அவர் பயணம் மேற்கொண்டார். அப்போது தான் அமீரகத்தில் அவருக்கு "கோல்டன் விசா" வழங்கி கௌரவிக்கப்பட்டது. அங்கு பிரபல லு லு மால் நிறுவன தலைவரோடு அவர் துபாய் நகரத்தில் பல இடங்களுக்கு சுற்றுலாவும் சென்றார். மேலும் தனது ஆன்மீக பயணங்கள் அனைத்தையும் முடித்த ரஜினிகாந்த், பல அரசியல் தலைவரைகளையும் சந்தித்து உரையாடினார்.
'வேட்டையன்' ஆடியோ லான்ச்..! வீறுநடை போட்டு வந்த ரஜினிகாந்த் - வைரல் வீடியோ!
இந்த சூழ்நிலையில் தான் தனது 170வது திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எந்த இயக்குனரோடு இணைய போகிறார் என்கின்ற கேள்வி எழுந்தது. ஏற்கனவே சூர்யாவை வைத்து "ஜெய் பீம்" என்கின்ற மெகா ஹிட் திரைப்படத்தை இயக்கி, தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக மாறிய ஞானவேல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது திரைப்படத்தை இயக்கு உள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் அந்த திரைப்படத்திற்கு "வேட்டையன்" என்று பெயரிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்தது.
மேலும் முதல் முறையாக பிரபல பாலிவுட் நடிகர் அமிதாபச்சனை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்கிறார் ஞானவேல் என்ற தகவலும் கிடைத்தது. தொடர்ச்சியாக அந்த பட பணிகளில் ஈடுபட்டிருந்தபோது தான், பிரபல அரசியல் தலைவர் மற்றும் நடிகர் விஜயகாந்த் காலமானார். உடனடியாக தனது படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சென்னை விரைந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
சில வாரங்களுக்கு முன்பு தனது வேட்டையன் பட டப்பிங் பணிகளை முடித்த ரஜினிகாந்த், ஒரு சிறு ஓய்வுக்கு பிறகு உடனே தனது 171வது பட பணிகளை துவங்கினார். ஏற்கனவே உலக நாயகன் கமல் மற்றும் தளபதி விஜயை வைத்து 3 மெகா ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் "கூலி" என்ற படத்தில் நடிக்க துவங்கினார். இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் நாகர்ஜுனா, கன்னட நடிகர் உபேந்திரா, மலையாள நடிகர் சௌபின், டாப் தமிழ் நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியானது.
இப்போது பிஸியாக லோகேஷ் கனகராஜன் கூலி திரைப்பட பணிகளில் ஈடுபட்டு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மாலை விமான மூலம் சென்னை வந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் "வேட்டையன்" இசை வெளியீட்டு விழாவில் அவர் கலந்து கொண்டுள்ளார்.
தனது கூலி திரைப்பட பணிகளுக்காக வெளியூரில் ஷூட்டிங் பணிகளில் ஈடுபட்டு வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள தனது 170வது திரைப்படமான "வேட்டையன்" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்காக சென்னை வந்தார். நேரு உள் விளையாட்டு அரங்கில் தற்பொழுது இந்த இசை வெளியீட்டு விழா நடந்து வருகிறது. அதற்கு முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் செய்தியாளர்களின் கேள்விக்கு ஒன்றன்பின் ஒன்றாக பதில் அளித்து வந்தார்.
தனது வேட்டையன் திரைப்படம் அருமையாக வந்திருக்கிறது என்றும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தின் படபிடிப்பு பணிகளும் சிறப்பாக நடந்து வருவதாக கூறினார். மேலும் வேட்டையன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் யாரெல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்று கேட்டதற்கு, எனக்கு இன்னும் தெரியவில்லை, நான் அங்கு சென்று தான் பார்க்க வேண்டும் என்று கூறினார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக வாய்ப்புள்ளதாக பேச்சுகள் அடிபடுகிறது, இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்ட வுடனேயே, சட்டென்று கோவப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் "என்னிடம் அரசியல் சம்மந்தமான கேள்விகளை கேட்க வேண்டாம் என்று சொல்லி இருக்கிறேன், தயவு செய்து மீண்டும் இப்படி கேட்காதீர்கள்" என்று கோபமாக கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
"உங்க ஆட்சியில் தான் நடந்திருக்கு பவன்" திருப்பதி லட்டு விவகாரம் - பொங்கியெழும் பிரகாஷ் ராஜ்!