தென்னிந்திய மொழிகளில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் குஷ்பூ. தர்மத்தின் தலைவன் படம் மூலம் ஹீரோயினியாக என்ட்ரி கொடுத்த இவர் வருஷம் 16, வெற்றி விழா, கிழக்கு வாசல் என தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வந்தார்.
ரஜினி, கமல், பிரபு என அன்றைய காலகட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடி ஆனது மூலம் இங்கு மிகப் பிரபலமாகிவிட்டார். மற்ற நாயகிகள் போல் இல்லாமல் கொழுகொழுவென இருந்த இவரை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
தொடர்ந்து வருடத்திற்கு நான்கு, ஐந்து படங்களில் ஒப்பந்தமாகி மாஸ் காட்டி வந்தார் குஷ்பூ. இவருக்கு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது உள்ளிட்ட பல விருதுகள் குவிந்து வந்தது. அதோடு காமியோ ரோலிலும் தோற்றி வந்தார்.
இதற்கிடையே கடந்த 2000 ஆண்டு இயக்குனர் சுந்தர் சியை காதல் திருமணம் செய்து கொண்டார் குஷ்பூ. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் தோன்றி வந்த குஷ்பூ. அதன் பிறகு சிறப்பு தோற்றங்கள் ஏற்று நடிக்க ஆரம்பித்தார். அதோடு சீரியலிலும் கவனம் செலுத்தினார்.
கடந்த ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தில் அங்கையர் கன்னியாக தோன்றியிருந்தார். தற்போது வாரிசு படத்தின் முக்கிய ரோலில் நடித்து வருகிறார். இதற்கிடையே தனது உடலை இன்றைய நாயகிகள் ரேஞ்சிற்கு கட்டுடலாக மாற்றிய புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி வருகிறார். அரசியலிலும் மும்முறமாக ஈடுபட்டு வரும் குஷ்பூவின் புகைப்படங்கள் வைரலாவது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில் அவரது கணவர் சுந்தர் சி ..குஷ்பூவிற்கு ரசிகர்கள் கட்டிய கோவில் குறித்து பேசி இருப்பது வைரல் ஆகி வருகிறது. பிரபல இயக்குனரான சுந்தர் சி தற்போது காபி வித் காதல் என்னும் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இது குறித்தனா நேர்காணலில், குஷ்பூ தமிழ்நாட்டில் கொண்டாடப்படுவது உங்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியதா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
Sundar C
அதற்கு பதில் அளித்தவர் சுந்தர் சி.. குஷ்பூவை காதலிப்பதற்கு முன்னதாகவே இவை எல்லாம் நடந்து முடிந்து விட்டதாகவும் எனவே தான் எனக்கு பொறாமை எல்லாம் உருவாகவில்லை என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.