ரஞ்சனி சீரியல் கிளைமாக்ஸ்
நட்பை மையமாக வைத்து ரஞ்சனி தொடர் ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியல் 5 நண்பர்களுக்குள் நடக்கும் சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையமாக வைத்து உருவாகி வந்தது. சிம்பிளாக சொல்லப்போனால் விக்ரமனின் புது வசந்தம் பட பாணியில் இந்த தொடர் உருவாகி வந்தது. மெல்ல மெல்ல பிக் அப் ஆகி வந்த இந்த சீரியல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. இந்நிலையில், தற்போது ரஞ்சனி சீரியலுக்கு எண்டு கார்டு போட்டுள்ளனர்.