இயக்குநர் அட்லி வீட்டில் எதிர்பாராத விதமாக நடந்த சோகம்... துக்கத்துடன் பகிர்ந்த உருக்கமான பதிவு...!

First Published Sep 13, 2020, 3:25 PM IST

இயக்குநர் அட்லி - ப்ரியா தம்பதி வீட்டில் நடந்த எதிர்பாராத திடீர் மரணம் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் அட்லி. தளபதி விஜய்யை வைத்து அட்லி இயக்கிய தெறி, மெர்சல், பிகில் ஆகிய 3 படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
undefined
இதையடுத்து தற்போது அட்லி இந்தியில் ஷாரூக்கானை இயக்க உள்ளதாகவும், அந்த படத்தில் தீபிகா படுகோனே நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
undefined
சின்னத்திரையில் கனா காணும் காலங்கள் சீரீயலில் தொடங்கி சினிமாவில் சில படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பிரியா என்பவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
undefined
திருமணத்திற்கு பிறகு ப்ரியா சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். தற்போது அட்லி - ப்ரியா தம்பதி மிகவும் மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வந்த நிலையில், எதிர்பாராதவிதமாக அவருடைய குடும்பத்தில் மூத்த உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
undefined
ப்ரியாவின் தாத்தாவான கலியராஜ் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த செய்தி திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
undefined
இதுகுறித்து அட்லி தனது சோசியல் மீடியா பக்கங்களில் உருக்கமாக பதிவிட்டுள்ளார், ‘பிரியாவின் தாத்தா இன்று காலமாகிவிட்டார். அவரை தாத்தா என்று அழைப்பது அவருக்கு பிடிக்காது எனவே எப்போதும் அவரை ப்ரோ என்றுதான் கூப்பிடுவேன். அவருக்கு 82 வயதாகிறது. கடந்த என்றுதான் கூட நாங்கள் நன்றாக பேசினோம்.
undefined
அவருக்கு என்னை ரொம்ப பிடிக்கும் என்னுடைய நலம் விரும்பியாக நண்பனாக என்னை வழிநடத்தினார். அவர் என்னிடம் சகஜமாக பழகுவார். ’மின்னலே’ படத்தில் நாகேஷ் நடித்த சுபினி தாத்தா போலவே இருப்பார். நீங்கள் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எங்கள் குடும்பம் ஒரு தூணையும் ஒரு நண்பனை இழந்து உள்ளது. உங்களுடைய இடத்தை எங்கள் வாழ்வில் யாராலும் நிரப்ப முடியாது’ என்று மிகவும் சோகத்துடன் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
undefined
click me!