இதுதவிர லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் ரஜினி. அதுதான் அவர் நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், தென்னிந்தியாவிற்கான இலங்கை துணைத் தூதர் வெங்கடேஷ்வரன் நடிகர் ரஜினிகாந்தை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசி உள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.
இந்த சந்திப்பின் போது நடிகர் ரஜினிகாந்திற்கு முக்கிய அழைப்பு ஒன்றையும் விடுத்துள்ளார் வெங்கடேஷ்வரன். அதன்படி பொருளாதார வீழ்ச்சியில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் இலங்கையின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு உதவ முன்வருமாறு ரஜினிக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.