* பின்னணி பாடகர், டப்பிங் கலைஞர், தயாரிப்பாளர், நடிகர், தொகுப்பாளர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞனாக விளங்கி வந்தார் எஸ்.பி.பாலசுப்ரமணியம்.
* எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் தந்தையும் ஒரு நடிகர் ஆவார். அவர் பல்வேறு நாடகங்களில் நடித்துள்ளதோடு, ஒரு பிரபலமான ஹரிகதா விரிவுரையாளராகவும் இருந்தார்.
* எஸ்.பி.பாலசுப்ரமணியம் அனந்தபுரத்தில் உள்ள ஜவஹர்லால் நேரு தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பு படித்து வந்த நிலையில், டைபாய்டு காச்சல் காரணமாக அவர் படிப்பை கைவிட நேர்ந்தது.