பாலிவுட் திரையுலகத்திற்கு இந்த ஆண்டின் முதல் பாதி மிகவும் மோசமானதாகவே அமைந்துள்ளது. ஏனெனில் கடந்த ஆறு மாதத்தில் அங்கு ரிலீசான படங்களில் பெரும்பாலானவை படுதோல்வியை சந்தித்தன. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது தென்னிந்திய திரைப்படங்கள் தான். ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர் முதல் கமலின் விக்ரம் வரை தென்னிந்திய படங்கள் இந்தியில் சக்கைபோடு போட்டன.
குறிப்பாக கங்கனா நடிப்பில் வெளியான தக்கட் திரைப்படம் அக்ஷய் குமார் நடிப்பில் வெளியான பச்சன் பாண்டே மற்றும் பிரித்விராஜ் ஆகிய படங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. இதில் தக்கட் மற்றும் பிரித்விராஜ் ஆகிய படங்கள் ரூ,100 கோடிக்கு மேல் நஷ்டத்தை சந்தித்தன. இதில் பிரித்விராஜ் படம் கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்கு போட்டியாக வெளியானது குறிப்பிடத்தக்கது.
வட இந்தியாவில் ரசிகர்களின் ரசனை மாறிவிட்டதால் என்னசெய்வதென்று தெரியாமல் பாலிவுட் இயக்குனர்கள் திண்டாடி வருகின்றனர். அங்கு அடுத்ததாக பிரம்மாஸ்திரம் என்கிற பிரம்மாண்ட படம் வர உள்ளது. இந்த படத்தை தான் பாலிவுட்டே மலைபோல் நம்பி உள்ளது. அவர்களின் எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்யுமா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.