சூர்யா கால்ஷீட் கேட்டு வீட்டுக்கு வந்த இயக்குனரிடம்... அநாகரிகமாக பேசி, கேவலப்படுத்தி அனுப்பினாரா சிவகுமார்?

First Published Feb 6, 2023, 3:36 PM IST

சூர்யாவின் கால்ஷீட் கேட்டு, வீடு தேடி வந்த மூத்த இயக்குனர் ஒருவரை... நடிகரும் சூர்யாவின் தந்தையுமான சிவகுமார் அசிங்கப்படுத்தி அனுப்பியதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவில் எண்ணற்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் சிவகுமார். திரைப்படங்களை தாண்டி சில முக்கிய சீரியல்களிலும் நடித்துள்ளார். சமீப காலமாக, திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், யோகா, ஓவியம், மற்றும் தன்னுடைய மகன்கள் செய்யும் நலப்பணி திட்டங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

திரையுலகில் பெரிதாக எந்த ஒரு, சர்ச்சையிலும் சிக்காமல் இருக்கும் சூர்யா மற்றும் கார்த்தி இருவருமே, தந்தியின் பெயர் சொல்லும் பிள்ளைகள் என பெயர் எடுத்தவர்கள்.

சேலையில் அம்மா தேவயானியை மிஞ்சிய அழகு! கியூட் தேவதை போல் ஜொலிக்கும் மகள் இனியாவின் புகைப்படம் வைரல்!

மேலும் தொடர்ந்து சிறந்த கதைககளையும், சமூக பொறுப்புடன் படங்களை தேர்வு செய்து நடித்து வருவது மட்டும் இன்றி, சூர்யா தன்னுடைய அகரம் அறக்கட்டளை மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளை படிக்க வைத்து வருகிறார்.

கார்த்தி, உழவன் என்கிற அறக்கட்டளை மூலம், விவசாயிகளுக்கு உதவி வருகிறார். இப்படி பெரிதும் மதிக்கப்பட்டு வரும் கலை குடும்பமாக இருந்து வருகிறது.

பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகருக்கு நடந்த திருமணம்..! வைரலாகும் அழகிய ஜோடிகளின் புகைப்படம்..!

இந்நிலையில் தமிழில் எதாரணமான திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஜெயபாரதி, சூர்யாவிற்கு கதை சொல்ல வந்தபோது, அவரை பழம்பெரும் நடிகர் சிவகுமார் நாகரீகம் இல்லாதா வார்திகள் பேசி அவரை அனுப்பியதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

இயக்குனர் ஜெயபாரதி, 1979 ஆம் ஆண்டு வெளியான குடிசை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். இதை தொடர்ந்து ஊமை ஜன்னல்கள், நண்பா நண்பா, குருஷியேத்ரம் போன்ற பல எதார்த்தமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கியவர். தமிழ் சினிமாவில்... புதுவிதமான, அழுத்தமான கதைகள் படங்களாக வேண்டும் என நினைத்த இயக்குனர் ஜெயபாரதி .

கணவர் இறந்தபின் எல்லாமே மறந்திருச்சு... மனமும் வெறுமையாகிவிட்டது - கலங்கிய பானுப்ரியா

இவரின் படங்களில் நடித்தால், தன்னுடைய மகனின் திரையுலக வாழ்க்கை கேள்வி குறியாக கூட மாறலாம் என... படத்தின் கதையை கூட கேட்காமல் சிவகுமார் திருப்பி அனுப்பியுள்ளார் என தற்போது ஒரு தகவல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

click me!