தோலுக்கு மேல் வளர்ந்துவிட்ட பிள்ளைகள்... திடீர் என இரண்டாம் திருமணம் குறித்து அறிவித்த பிரபல பாடகி..!

First Published Dec 7, 2020, 7:10 PM IST

பிரபல பாடகி சுனிதா திடீர் என தன்னுடைய திருமணம் குறித்து அறிவித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
 

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் பல பாடல்களை பாடி பிரபலமானவர் பாடகி சுனிதா.
undefined
தமிழில் இளையராஜா இசையிலும், மற்ற சில இசையமைப்பாளர்கள் இசையிலும் சில பாடல்களை பாடி இருந்தாலும்... தெலுங்கு திரையுலகில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இதை தாண்டி சில முன்னணி நடிகைகளுக்கும் டப்பிங் பேசியுள்ளார்.
undefined
19 வயதிலேயே திருமணம் செய்து கொண்ட சுனிதாவிற்கு அக்ஷய் என்கிற மகனும், ஷ்ரேயா என்கிற மகளும் உள்ளனர்.
undefined
இளம் வயதிலேயே கணவரை விட்டு பிரிந்து, தனி ஆளாக மகன் மற்றும் மகளை வளர்த்து ஆளாக்கினார். சுனிதாவின் மகள் ஸ்ரேயாவும் தற்போது பாடகியாக உள்ளார்.
undefined
சமீப காலமாகவே சுனிதா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் இதை தொடர்ந்து மறுத்து வந்தார்.
undefined
தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு, விரைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள உள்ளதை தெரிவித்துள்ளார்.
undefined
என் வாழ்க்கையில் அற்புதமான நண்பராகவும் சிறந்த பார்ட்னராக ராம் அவர்கள் நுழைந்துள்ளார். நாங்கள் விரைவில் திருமணம் செய்ய உள்ளோம். எங்களுடைய என்னுடைய நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி என்று கூறியுள்ளார்.
undefined
மேலும் இந்த திருமணத்தை தன்னுடைய மகள் மற்றும் மகன் ஆகியோரும் மனதார ஆதரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
undefined
சுனிதாவின் இந்த தைரியமான முடிவிற்கு பலர் தங்களுடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
undefined
click me!