சுச்சி லீக்ஸ்
கடந்த 2017ம் ஆண்டு, அதாவது பிரபல பாடகி சுசித்ரா தனது கலை உலக பயணத்திலிருந்து ஓய்வு பெற்றதற்கு அடுத்த ஆண்டு என்றே கூறலாம். அப்போது "சுச்சி லீக்ஸ்" என்ற தலைப்பில் நடிகர் தனுஷ், திரிஷா, ரானா தகுபதி, ஆண்ட்ரியா, இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகை அமலா பால் என்று பலரது சர்ச்சையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு கோலிவுட் திரை உலகை ஆட்டம் காண வைத்தார் சுசித்ரா. அப்போது சர்ச்சைகளின் நாயகியாக மாறிய அவர் இந்த ஏழு ஆண்டுகளில் பல பரபரப்பான விஷயங்களை தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார்.
திரைத்துறை என்பது ஒரு மாய உலகம் என்பார்கள், அதற்கு ஏற்றார் போல எப்போது அங்கு என்ன நடக்கும் என்பது எல்லாமே மாயம் தான். தனிமனிதர்கள் மட்டுமல்ல, சினிமா பிரபலங்கள் என்று வரும்போது கூட அவர்களுடைய சொந்த வாழக்கை என்பது தனிநபர் விஷயமாகவே பார்க்கப்பட வேண்டும் என்பதே பலரின் பொதுவான கருத்து. அந்த ஒரு விஷயத்தில் தான் சுசித்ராவிற்கு எதிராக பலரும் போர்க்கொடி தூக்க துவங்கினர்.
ஆட்டிப்படைக்கும் ஆர்த்தியின் குடும்பம்.. JRன் டிவோர்ஸ் முடிவுக்கு "இதுவே" காரணம் - பொங்கும் நெட்டிசன்ஸ்!