தென்னிந்திய திரையுலகில் ஹாட் ஜோடியாக வலம் வந்து கொண்டு கொண்டிருக்கும் அதிதி -சித்தார்த் ஜோடி, VOGUE மேகசீனுக்கு விதவிதமான போஸ் கொடுத்துள்ளதோடு... தங்களின் காதல் மற்றும் திருமணம் குறித்த பல தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
நடிகர் சித்தார்த், இயக்குனர் மணிரத்னத்திடம் துணை இயக்குனராக பணியாற்றி... பின்னர் இயக்குனர் ஷங்கர் இயக்கிய, 'பாய்ஸ்' படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே மிகவும் போல்டான காட்சிகளில் நடித்தது சில விமர்சனங்களுக்கு ஆளான போதும், சித்தார்த்தின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
27
Siddharth divorce First Wife Meghna
முதல் படத்தில் நடித்து முடித்ததுமே... தன்னுடைய காதலி மேக்நோவை திருமணம் செய்து கொண்ட சித்தார்த் 4 வருடத்திலேயே அவரிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். மேக்கனாவை பிரிந்த பின்னர் ஸ்ருதி ஹாசன், சமந்தா போன்ற நடிகைகளுடன் சில காலம் டேட்டிங்கில் இருந்து பின்னர் பிரேக் கப் செய்த சித்தரித்து, தற்போது நடிகை அதிதி ராய் ஹைடரியுடன் கடந்த இரண்டு வருடங்களாக காதலில் உள்ளார்.
இவர்கள் இருவரும் மகாசமுத்திரம் என்கிற படத்தில் இணைந்து பணியாற்றியபோது காதல்வயப்பட்டனர். ஆரம்பத்தில் சீக்ரெட்டாக தங்களுடைய உறவை வைத்திருந்த இந்த ஜோடி, பின்னர் விஷயம் வெளியே தெரிந்ததால், இருவரும் காதலிப்பதை உறுதி செய்தனர்.
47
Aditi Rao Hydari Love
சமீபத்தில் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் எளிமையான முறையில் நடந்து முடிந்ததை இருவருமே புகைப்படம் வெளியிட்டு அறிவித்த நிலையில், அடுத்த ஆண்டு துவக்கத்தில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
திருமணத்திற்கு முன்பே சித்தார்த் - அதிதி ஜோடி, லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வரும் நிலையில்... திரைப்பட விழாக்கள், மற்றும் பிரபலங்களின் திருமண விழாக்களில் கூட ஒன்றாகவே கலந்து கொள்வதைவிரும்புகிறார்கள் .
67
Aditi Rao Hydari and Siddharth Vogue Photos
இந்நிலையில் சித்தார்த் - அதிதி இருவரும் இணைந்து முதல் முறையாக VOGUE மேகசீனுக்கு இணைந்து போஸ் கொடுத்துள்ளனர். இந்த மேகசீனில் தங்களின் திருமணமா குறித்த சிலமுக்கிய தகவல்களையும் இருவரும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
அதாவது இவர்களின் திருமணம், குறித்து பகிர்ந்து கொண்ட அதிதி ராவ் "எண்களின் திருமணம் என் குடும்பத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த வனபர்த்தியில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கோயிலில் நடக்கும் என கூறியுள்ளார். திருமணம் எளிமையாக கோவிலில் நடந்தாலும் இவர்களின் திருமண ரிசப்ஷன் பிரமாண்டமாக நடைபெறும் என கூறப்படுகிறது.