இதுகுறித்து நடிகர் சிபிராஜ் கூறுகையில், ‘டாவின்சி கோட், இன்டியானா ஜோன்ஸ் போன்று படம் பண்ண வேண்டும் என்று இருந்தேன். அதுவும், இளையராஜா இசையில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் நிறைவேறியுள்ளது. சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இந்தப் படம் அமையும்.’ என்கிறார்.
இதுகுறித்து அப்படத்தின் இயக்குனர் கிஷோர் கூறுகையில், ‘மாயோன் ஃப்ரெஷ்ஷான திரைக்கதை. நிறைய பொருட் செலவில் பிரமாண்டமாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுக்க எளிதாக புரிந்து, உணரக்கூடிய படமாக இருக்கும் என்கிறார்.