அம்மாவுக்காக புதிய வீட்டை இடித்த சீரியல் நடிகை பிரியா பிரின்ஸ்! ஏன் தெரியுமா?

First Published Jun 10, 2023, 8:25 PM IST

செய்தி வாசிப்பாளரும், சீரியல் நடிகையுமான ப்ரியா பிரின்ஸ் தன்னுடைய அம்மாவின் மகிழ்ச்சிக்காக வீட்டில் குறிப்பிட்ட பகுதியை இடித்துவிட்டு மீண்டும் கட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
 

பிரபல தனியார் தொலைக்காட்சியில், செய்தி வாசிப்பாளராக இருந்ததன் மூலம் பிரபலமானவர் பிரியா பிரின்ஸ். இதன் மூலம் கிடைத்த பிரபலத்தை வைத்து கொண்டு, சீரியல்களில்  நடிக்க துவங்கினார். 

'என் பெயர் மீனாட்சி' என்கிற சீரியல் மூலம் தன்னுடைய சின்னத்திரை பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்ட பிரியா பிரின்ஸ், இதை தொடர்ந்து, தமிழ் கடவுள் முருகன், EMI, மாப்பிள்ளை, உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்தார்.

குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பான 'கண்ணான கண்ணே'  சீரியலில் இவர் நடித்த வில்லி வேடம், இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இதை தொடர்ந்து இலக்கியா, மற்றும் ராமன் தேடிய சீதை ஆகிய தொடர்களில் தன்னுடைய வில்லி நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். 

சீரியலை தாண்டி, வெள்ளித்திரையில் கடந்த 2015 ஆம் ஆண்டு இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான 'பசங்க 2' படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். பின்னர் 2.ஓ மற்றும் நடுவன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், ப்ரியா பிரின்ஸ் சமீபத்தில் ஒரு பிரமாண்டமான புதிய வீட்டைக் கட்டி வந்தார். இந்த வீட்டில்   பார் செட்டப்புடன் கட்டி இருந்தார். இதுகுறித்து அவரே தனது யூடியூப்பில் பக்கத்தில் தெரிவித்தார்.

இந்த வீட்டின், ஒரு சிறு பகுதியை பிரியா பிரின்ஸ் இடித்து விட்டு மீண்டும் கட்டியுள்ளார். ஓப்பன் கிச்சனாக இருக்க வேண்டும் என அவரின் தாய் ஆசை பட்டுள்ளார். ஆனால் வேறு மாதிரி கட்டப்பட்டதால், தற்போது தன்னுடைய அம்மாவின் ஆசைக்காக குறிப்பிட்ட அந்த பகுதியை இடித்து விட்டு, மீண்டும் கட்டியுள்ளாராம். இதற்க்கு பல பட்சம் வரை செய்துள்ளதாக தெரிகிறது. இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

click me!