சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் மக்கள் விரும்பும் சீரியல் நடிகையாக வலம் வந்தவர் சித்ரா. சின்னத்திரையில் டாப் ஹீரோயினாக வலம்வந்த இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவர் தற்கொலை செய்வதற்கு சில மாதங்களுக்கு முன்னர் ஹேம்நாத் என்பவரை பதிவு திருமணம் செய்துகொண்டார். தற்கொலை செய்தபோது அவர் ஹேம்நாத்துடன் இருந்ததால், சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். சமீபத்தில் ஜாமீன் பெற்று வெளியே வந்த ஹேம்நாத் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரின் இந்த குற்றச்சாட்டுக்கு பின்னர் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியது. இந்நிலையில், பிரபல பத்திரிகை செய்தியில் சித்ராவின் திருமணம் குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சித்ராவுக்கு போதை பழக்கம் இருந்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் சீரியல் நடிகைகளை அரசியல்வாதிகளுக்கு விருந்தாக்கும் கும்பலுடனும் சித்ராவுக்கு தொடர்பு இருந்ததாம்.