
டெல்லி விஞ்ஞான பவனில் 71ஆவது தேசிய திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர், நடிகைகள், துணை நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், இயக்குநர்கள் என்று பல பிரிவுகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு அண்மையில் விருது அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து டெல்லியில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளில் சிறந்து விளங்கிய பிரபலங்களுக்கு விருது வழங்கப்பட்டது.
கௌதமுக்கு கிடைத்த தண்டனை; மண்ணை கவ்விய வைஜெயந்தி - அண்ணா சீரியல் இன்றைய எபிசோட் அப்டேட்
இதில், பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி அவருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. பொதுவாக சிறந்த நடிகருக்கு விருது பெறுபவர்கலுக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும். ஆனால், ஷாருக் கான் உடன் இணைந்து 12ஆவது பெயில் (12th Fail) பட நடிகர் விக்ராந்த் மெஸ்ஸிக்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. இதன் காரணமாக அவருக்கும், ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான படங்களில் ஷாருக் கானின் ஜவான் படமும் ஒன்று. இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி என்று மாஸ் நட்சத்திரங்கள் பலர் நடித்திருந்து 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி வெளியான படம் தான் ஜவான். உலகம் முழுவதும் வெளியான இந்தப் படம் ரூ.1148 கோடி வரையில் வசூல் குவித்து 1000 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்த என்ற படம் என்ற சாதனையை ஜவான் படம் படைத்துள்ளது. இந்தப் படத்திற்கான சிறந்த நடிகருக்கான தேசிய திரைப்பட விருது அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று விருது வழங்கப்பட்டது.
தாதாசாகேப் பால்கே விருது பெற்ற மோகன்லால்; எமோஷனலான மோகன்லால் மனைவி!
இந்த நிகழ்வில் அவரது மேலாளர் பூஜா தத்லானியும் கலந்து கொண்டார். தேசிய திரைப்பட விருது வென்றவர்களின் பட்டியல் ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் சிறந்த முன்னணி நடிகராக ஷாருக் கான் பெயர் இடம்பெற்றது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஷாருக் கான் தனது ரசிகர்கள், குழு, குடும்பத்தினர் மற்றும் சக ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு உணர்ச்சிகரமான வீடியோவை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தார்.
"தேசிய விருது வழங்கி என்னைக் கௌரவித்ததற்கு நன்றி. நடுவர் குழுவிற்கும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கும் நன்றி. இந்த மரியாதைக்காக இந்திய அரசுக்கு நன்றி. என் மீது பொழியப்பட்ட அன்பால் நான் நெகிழ்ந்துள்ளேன். இன்று அனைவருக்கும் ஒரு பாதி அணைப்பு...," என்று அவர் கூறினார்.
அப்பாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கதிர் – டிராவல்ஸூக்கு என்ன பேரு தெரியுமா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2!
"சொல்லத் தேவையில்லை, நான் நன்றி, பெருமை மற்றும் பணிவுடன் நெகிழ்ந்துள்ளேன். தேசிய விருதுடன் கௌரவிக்கப்படுவது என் வாழ்நாள் முழுவதும் நான் போற்றும் ஒரு தருணம். நடுவர் குழு, தலைவர், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மற்றும் இந்த மரியாதைக்கு நான் தகுதியானவன் என்று நினைத்த அனைவருக்கும் மிக்க நன்றி," என்று 59 வயதான நடிகர் கூறியிருந்தார்.
Dulquer Salmaan: நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் சுங்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை! என்ன காரணம்?
தனது 'கிங்' படத்திற்காக வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த ஷாருக் கான், 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்வதற்காக பிரத்யேகமாக டெல்லிக்குத் திரும்பினார். 'கிங்' படத்தில், ஷாருக் கான் தனது மகள் சுஹானாவுடன் திரையைப் பகிர்ந்து கொள்வார். தீபிகா படுகோனும் இந்தப் படத்தின் ஒரு பகுதியாக உள்ளார்.
படத்துடன், கிட்டத்தட்ட "18 ஆண்டுகளுக்கு" முன்பு அவரிடமிருந்து என்ன கற்றுக்கொண்டார் என்பது பற்றிய ஒரு உருக்கமான குறிப்பையும் எழுதினார். "சுமார் 18 ஆண்டுகளுக்கு முன்பு 'ஓம் சாந்தி ஓம்' படப்பிடிப்பின் போது அவர் எனக்குக் கற்றுக் கொடுத்த முதல் பாடம், ஒரு திரைப்படத்தை உருவாக்கும் அனுபவமும், அதை யாருடன் உருவாக்குகிறீர்கள் என்பதும் அதன் வெற்றியை விட மிக முக்கியமானது. நான் இதை முழுமையாக ஒப்புக்கொள்கிறேன், அன்றிலிருந்து நான் எடுத்த ஒவ்வொரு முடிவிலும் அந்தப் படிப்பினையைப் பயன்படுத்தியுள்ளேன். அதனால்தான் நாங்கள் எங்கள் 6வது படத்தை ஒன்றாக உருவாக்க மீண்டும் வந்துள்ளோம். #king #day1," என்று தீபிகா பதிவிட்டிருந்தார்.
'கிங்' படம், ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோன் ஆறாவது முறையாக திரையைப் பகிர்ந்து கொள்ளும் படமாகும். அவரது அறிமுக பிளாக்பஸ்டர் 'ஓம் சாந்தி ஓம்' முதல் 'சென்னை எக்ஸ்பிரஸ்,' 'ஹேப்பி நியூ இயர்,' 'பதான்,' மற்றும் 'ஜவான்' போன்ற ஹிட் படங்கள் வரை, இருவரும் ரசிகர்களை மகிழ்விக்கத் தவறியதில்லை.