shah rukh khan -atlee
தெறி,மெர்சல், பிகில் என அடுத்தடுத்த விஜயின் ஹிட் படங்களை இயக்கிய அட்லீ தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதன் மூலம் பொலிவு திரையுலகிற்குள் என்ட்ரி கொடுத்துள்ள அட்லீ இயக்கம் இந்த படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'ஜவான்' என்று பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர்கள் விரைவில் வெளியிடுவார்கள் என்று தெரிகிறது.
shah rukh khan -atlee
மகன் மீது போடப்பட்ட போதைப்பொருள் வழக்கால் மனா உளைச்சலில் இருந்த ஷாருக்கான் படப்பிடிப்பிலிருந்த்து பாதியில் கிளம்பியதால் படம் நின்று விடும் என பேசப்பட்டது. பின்னர் மிண்டும்வெளிநாடுகளில் நடைபெற்ற சூட்டிங்கில் கலந்துகொண்டு படப்பிடிப்பை முடித்து கொடுத்தார் ஷாருக்கான் ஜவான் என்று பெயரிடப்பட்டுள்ளது, விரைவில் 1 நிமிடம் 34 வினாடிகள் கொண்ட டீசரை டைட்டிலும் வெளியிடப்படும்" என்று சினிமா வட்டாரம் தெரிவித்தது.
shah rukh khan -atlee
இந்த படத்தில் நயன்தாரா விசாரணை அதிகாரியாகவும், SRK இரட்டை வேடத்திழும் வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இப்படத்தில் சன்யா மல்ஹோத்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள படப்பிடிப்பை ராஜ்குமார் ஹிரானியுடன் 'டன்கி' படத்தின் வேலையைத் தொடங்குவதற்கு முன், ஷாருக், ஒரே ஷெட்யூலில் மீண்டும் முடிக்க திட்டமிடப்படுள்ளதாகவும் கூறப்படுகிறது.