பாடலாசிரியர் நா முத்துக்குமார் கதவுக்காக எழுதிய காதல் பாடல் பல இசையமைப்பாளர்களால் ரிஜெக்ட் செய்யப்பட்ட நிலையில், அதனை ஜிவி பிரகாஷ்குமார் அடிபொலி ஹிட் அடித்துள்ளார்.
பாடலாசிரியர் நா முத்துக்குமார் கோலிவுட்டில் அதிகளவில் பணியாற்றிய இசையமைப்பாளர்களில் ஜிவி பிரகாஷ் குமாரும் ஒருவர். ஜிவி-யின் முதல் படமான வெயிலில் தொடங்கிய இவர்களது கூட்டணி, அடுத்தடுத்து தெய்வத்திருமகள், தாண்டவம், மதராசப்பட்டினம், தலைவா என தொடர்ந்து பல்வேறு படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தனர். நா முத்துக்குமார் எழுதி பல இசையமைப்பாளர்கள் ரிஜெக்ட் பண்ணிய பாடல் ஒன்று இறுதியாக ஜிவி பிரகாஷ் குமார் கையில் கிடைத்ததும் அவர் அப்பாடலை அடிபொலி ஹிட் அடிக்க வைத்திருக்கிறார். அப்பாடலை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
24
நா முத்துக்குமார் பாடல் ரகசியம்
நா முத்துக்குமார், ரொம்ப நாளா ஒரு பாடலுக்கான லிரிக்ஸ் வச்சிருந்தாராம். அதை யாருமே வாங்கவில்லை. தெய்வத்திருமகள் ஹிட்டான சமயத்தில் ஜிவி பிரகாஷ் உடன் விமானத்தில் சென்றிருக்கிறார் நா முத்துக்குமார். அப்போது, ஜிவி என்கிட்ட ஒரு நல்ல லிரிக்ஸ் இருக்கு. எல்லா இடத்துலையும் அந்த லிரிக்ஸை கொடுத்தேன். யாருமே எடுத்துக்கல, நீ கேக்குறியா சூப்பரா இருக்கும் என சொல்லி இருக்கிறார். அதற்கு ஜிவி உடனே கொடுங்க அண்ணா என கேட்க, உடனே நா முத்துக்குமாரும் பாடல் வரிகளை சொல்லி இருக்கிறார். அப்படி விமான பயணத்திலேயே அந்த பாடலை கம்போஸ் செய்திருக்கிறார்கள்.
34
ஒரு பாதி கதவு பாடல் உருவான விதம்
அந்த பாடல் வேறெதுவுமில்லை, ஏ.எல்.விஜய் இயக்கிய தாண்டவம் படத்தில் இடம்பெற்ற ஒரு பாதி கனவு நீயடி பாடல் தான். அந்த விமான பயணத்தின் போது இயக்குநர் ஏ.எல்.விஜய்யும் உடன் இருந்ததால், அவரிடம் சொல்லி அதை அவருடைய படத்துக்கு பயன்படுத்திக் கொள்ளச் சொன்னாராம் ஜிவி. திருட்டு பயத்தினால் கதவுகள் சேர்ந்தே இருக்கும் என அந்த பாடலில் அழகாக எழுதி இருப்பார் முத்துக்குமார். அதேபோல் கனவுகளை திருடும் அதிசயத்தை காதல் செய்யும் என அழகாக வர்ணித்து இருப்பார். இடி, மழை என எது பேய்ந்தாலும் கதவுகள் அசையாமல் இருக்கும் என்றும் சுட்டிக்காட்டி இருப்பார்.
இதயம் ரெண்டாக இருந்ததால் கதவு தேவைப்பட்டது. தற்போது ஒன்றாகிவிட்டதால் அதற்கு எதுக்கு கதவு என அழகாக எழுதி இருப்பார் முத்துக்குமார். கதவு இல்லாமல் போனதால் நம் வீட்டை சுற்றியுள்ள மரம், செடி, கொடிகளின் பூங்காற்று நம் வீட்டுக்குள் வீசும் என அழகாக கதவை காதலோடு ஒப்பிட்டு எழுதி இருப்பார் முத்துக்குமார். இப்பாடல் இன்றளவும் காதலர்கள் பலரின் ஃபேவரைட் பாடலாக இருந்து வருகிறது. இப்பாடலைக் கேட்ட பின்னர், அதை வேண்டாம் என்று ரிஜெக்ட் பண்ணிய இசையமைப்பாளர்கள் நிச்சயம் ஃபீல் பண்ணி இருப்பார்கள் என்பது மட்டும் உறுதி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.