விஷால் - சமந்தா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான இரும்புத்திரை படம் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன். ஆன்லைன் மூலம் நடக்கும் நூதன கொள்ளையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. முதல் படத்திலேயே முத்திரை பதித்த பி.எஸ்.மித்ரன் அடுத்ததாக சிவகார்த்திகேயன் உடன் இணைந்தார்.