தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம், தற்போது முழு நேர ஹீரோவாகி விட்டார். இவர் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் டிடி ரிட்டன்ஸ். இது தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாம் பாகம் ஆகும். தில்லுக்கு துட்டு படங்களின் இரண்டு பாகங்களும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றன. அந்த இரண்டு படங்களையும் ராம்பாலா இயக்கி இருந்தார். தற்போது தில்லுக்கு துட்டு மூன்றாம் பாகமாக வெளியாகி இருக்கும் டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கி உள்ளார்.