
Samantha Ready For Comeback in Cinema : உடல்நிலை சரியில்லாமல் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக நடிகை சமந்தா சினிமாவில் இருந்து விலகி இருந்தார். ஒரு வருடத்திற்கு மேல் நடிக்காததால், அனைவரும் சமந்தாவின் கெரியர் முடிந்தது என்று நினைத்தார்கள். பாலிவுட்டில் சிட்டாடல் வெப் சீரிஸில் கலக்கிய அவர், தென்னிந்திய திரையுலகை மறந்துவிட்டார் என்று கூறினர். சமந்தாவின் ஸ்டார் அந்தஸ்து போய்விட்டது. அவருக்கு வயதும் ஆகிவிட்டது, இனி வெப் சீரிஸ் மற்றும் கேரக்டர் ரோல்களில் நடிக்க வேண்டியதுதான் என்று விமர்சித்தனர்.
ஆனால், சமீபத்திய தகவல்களின்படி, சமந்தா கைவசம் உள்ள படங்களைப் பற்றி கேள்விப்பட்டால் வாயடைத்து போவீர்கள். கிட்டத்தட்ட 1500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் படங்களில் அவர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமந்தாவின் ரீ-என்ட்ரி பிரம்மாண்டமாக இருக்கப் போகிறதாம்.
சமந்தாவுக்கு அடித்த ஜாக்பாட்
ராம் சரணுடன் ரங்கஸ்தலம் படத்தில் நடித்து அசத்திய சமந்தா, மீண்டும் ராம் சரண் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. தற்போது ராம் சரண் புச்சிபாபு இயக்கத்தில் பெட்டி திரைப்படத்தில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தில் ஜான்வி கபூர் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. இதையடுத்து ராம் சரண் - சுகுமார் கூட்டணியில் பிரம்மாண்ட பட்ஜெட் படம் ஒன்று உருவாக உள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்க்கு மேல் இருக்குமாம். இந்த படத்தில் சமந்தாவை கதாநாயகியாக நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்களாம். எனவே சமந்தா இந்த படத்தின் மூலம் பிரம்மாண்ட ரீ-எண்ட்ரி கொடுக்க காத்திருப்பதாக தெரிகிறது.
இதையும் படியுங்கள்... சமந்தா நடிக்க மறுத்து ஹிட்டான டாப் படங்கள் என்னென்ன?
அல்லு அர்ஜுன் படத்தில் சமந்தா
சமந்தா, அல்லு அர்ஜுன் கூட்டணியில் வெளியான சன் ஆஃப் சத்யமூர்த்தி திரைப்படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றது என்பது அனைவருக்கும் தெரியும். இப்போது இந்த காம்போ மீண்டும் இணையவுள்ளதாக பேச்சு அடிபடுகிறது. அந்த படம் வேறு எதுவும் இல்லை, அல்லு அர்ஜுன், அட்லீ கூட்டணியில் உருவாகும் பிரம்மாண்ட படம் தான் அது. இந்த பான் இந்திய திரைப்படம் சமீபத்தில் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு பிரமாண்டமாக அறிவிக்கப்பட்டது.
சயின்ஸ் ஃபிக்ஷன் ஜானரில் உருவாகும் இந்த படத்திற்கு சன் பிக்சர்ஸ் கிட்டத்தட்ட 800 கோடி ரூபாய் பட்ஜெட் செலவிடவுள்ளது. இந்த படத்தில் கதாநாயகி கதாபாத்திரத்திற்கு முதலில் பிரியங்கா சோப்ராவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால் அவர் ராஜமௌலி, மகேஷ் பாபு படத்தில் பிஸியாக இருக்கிறார். அதனால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டாராம். அதன் பிறகு இந்த கதையை சரியாக கையாளக்கூடிய கதாநாயகி சமந்தா என்று படக்குழு நினைத்ததாம். மேலும் இயக்குனர் அட்லீ ஏற்கனவே சமந்தாவுடன் ‘மெர்சல்’, ‘தெறி’ போன்ற படங்களில் பணியாற்றியுள்ளார். அல்லு அர்ஜுனும் சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறினாராம்.
கம்பேக் கொடுக்க ரெடியாகும் சமந்தா
சமந்தாவும் இந்த கதையை கேட்டு நன்றாக இருப்பதாக கூறி கிரீன் சிக்னல் கொடுத்ததாக தெரிகிறது. சமந்தா நாக சைதன்யாவுடன் விவாகரத்துக்குப் பிறகு சினிமாவில் தான் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஆனால் அண்மையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, அதில் இருந்து படிப்படியாக மீண்டு வந்தார். கடைசியாக அவர் நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு ‘குஷி’ திரைப்படம் வெளிவந்தது. தற்போது சமந்தாவின் திருமண செய்திகளும் வைரலாகி வருகின்றன. பிரபல இயக்குனரை சமந்தா இரண்டாவது திருமணம் செய்யவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
இதையும் படியுங்கள்... கோவில் கட்டி நடிகை சமந்தாவை கடவுளாக வழிபடும் ரசிகர்; எங்கு தெரியுமா?