தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனான நாக சைதன்யா, தந்தையை போல் சினிமாவில் ஹீரோவாக ஜொலித்து வருகிறார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் இவர், நடிகை சமந்தாவை கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து நான்கே ஆண்டுகளில அவரை விவாகரத்து செய்து பிரிந்தார்.
24
சமந்தா உடனான பிரிவுக்கு பின்னர் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நாக சைதன்யா, சமீபத்தில் வெளியான லால் சிங் சத்தா படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இப்படத்தில் நடிகர் அமீர்கானுக்கு நண்பனாகவும், இராணுவ வீரராகவும் நடித்திருந்தார். இது பாரஸ்ட் கோம்ப் என்கிற ஆங்கில படத்தின் ரீமேக் ஆகும்.
இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சமீபத்தில் கலந்துகொண்ட நாக சைதன்யாவிடம் தொகுப்பாளர் எப்போதாவது போலீசிடம் தப்பு பண்ணி மாட்டி உள்ளீர்களா என கேள்வியை கேட்டார். இதற்கு பதிலளித்த நாகசைதன்யா, தான் ஒருமுறை காரில் பெண்ணுடன் நெருக்கமாக இருந்தபோது வசமாக சிக்கியதாகவும், இது ஐதராபாத்தில் நடந்ததாகவும் கூறினார்.
44
உடனே அந்த தொகுப்பாளர், சிக்கியபோது பயமாக இருந்ததா என கேட்டதற்கு, சிக்கியபோது பயமாக இல்லை என கூறிய நாக சைதன்யா, சொல்றதுக்கு ஒரு கதையாவது ஆச்சேனு நினைச்சேன் என்று சொன்னார். அந்த காருக்குள் நான் என்ன செஞ்சேன்கிறது எனக்கு மட்டுமே தெரியும் என சிரித்தபடி கூறி உள்ளார் நாக சைதன்யா.
அவரின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள், அந்த பெண் யாராக இருக்கும் என கேள்வி எழுப்பி வருகின்றனர். சிலரோ இந்த விஷயம் சமந்தாவுக்கு தெரியுமா என்று கேட்டு அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.