எத்தனை கஷ்டங்கள் வந்தாலும்.. சினிமா மீதான காதலை இழக்கவில்லை - சாகுந்தலம் பட விழாவில் கண்ணீர்விட்டு அழுத சமந்தா

Published : Jan 09, 2023, 02:17 PM IST

சாகுந்தலம் படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என அப்படத்தின் இயக்குனர் குணசேகர் பாராட்டி பேசியதைக் கேட்டதும் எமோஷனல் ஆன சமந்தா, கண்ணீர் விட்டு அழுதார்.

PREV
15
எத்தனை கஷ்டங்கள் வந்தாலும்.. சினிமா மீதான காதலை இழக்கவில்லை - சாகுந்தலம் பட விழாவில் கண்ணீர்விட்டு அழுத சமந்தா

நடிகை சமந்தா மயோசிடிஸ் என்கிற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இதன்காரணமாக கடந்த 4 மாதங்களாக அவர் எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ளாமல் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்தார். இடையே அவரது யசோதா திரைப்படம் ரிலீஸ் ஆனபோது மட்டும் அப்படத்திற்காக இரண்டு பேட்டிகளைக் கொடுத்திருந்தார். அதில் கடந்த சில மாதங்கள் தான் மிகவும் கஷ்டப்பட்டதாக கூறி அழுததை பார்த்து அவரது ரசிகர்கள் மனமுடைந்து போயினர்.

25

இதையடுத்து சிகிச்சையை தொடர்ந்து வந்த சமந்தா, புத்தாண்டுக்கு பின்னர் தான் புத்துணர்ச்சி உடன் தனது பணிகளை மீண்டும் செய்யத் தொடங்கி உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை விமான நிலையத்திற்கு ஸ்டைலாக வந்திருந்த சமந்தாவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி இருந்தன.

இதையும் படியுங்கள்... நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் தோல்வி... ‘விதி கரெக்டா தான் செஞ்சிருக்கு’ - வடிவேலுவை பொளந்துகட்டிய முத்துக்காளை

35

இந்நிலையில், இன்று சமந்தா நடிப்பில் உருவாகி உள்ள புராண கதையம்சம் கொண்ட சாகுந்தலம் என்கிற திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் சமந்தாவும் கலந்துகொண்டார். நடிகை சமந்தா நீண்ட இடைவெளிக்கு பின் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி இது என்பதால், அவர் நிகழ்ச்சிக்கு வந்ததும் ரசிகர்கள் விசிலடித்து ஆரவாரம் செய்து மாஸ் எண்ட்ரி கொடுத்தனர்.

45

இதையடுத்து இந்நிகழ்ச்சியில் பேசிய இப்படத்தின் இயக்குனர் குணசேகர், இந்த படத்தின் உண்மையான ஹீரோ சமந்தா தான் என பாராட்டி பேசினார். அவரின் பேச்சைக் கேட்டதும் எமோஷனல் ஆன சமந்தா, கண்ணீர் விட்டு அழுதார். சாகுந்தலா கதாபாத்திரத்திற்கு பலரை நடிக்க வைக்க முயன்றதாகவும், இறுதியில் தயாரிப்பாளர் நீலிமா தான் சமந்தாவை பரிந்துரை செய்ததாக குணசேகர் தெரிவித்தார்.

55

பின்னர் சமந்தா பேசியபோது, “இந்த தருணத்திற்காகத்தான் பல நாட்களாக காத்திருந்தேன். படம் எதிர்பார்த்தபடி ரிலீசாக வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக இருக்கும். ஆனால் சில நேரங்களில் மட்டும் ஒரு சில மாயம் நடக்கும். அப்படித் தான் சாகுந்தலம் படத்துக்கும் நடந்தது. எத்தனை கஷ்டங்களை சந்தித்தாலும் சினிமா மீதான காதலை நான் இழக்கவில்லை” என பேசினார் சமந்தா.

இதையும் படியுங்கள்... நவ நாகரீக சரித்திரத்திற்கு அவள் ஆரம்ப புள்ளி..! சமந்தா நடித்துள்ள 'சகுந்தலம்' படத்தின் ட்ரைலர் வெளியானது!

Read more Photos on
click me!

Recommended Stories