நடிகை சாக்ஷி அகர்வால் ஒரே மாதிரியான சாயல் கொண்ட கதாபாத்திரங்களை தவிர்த்து, தன்னுடைய நடிப்புக்கு தீனி போடும் விதமான கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நடிகை சாக்ஷி அகர்வால், எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி, தன்னுடைய அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்த எப்போதும் தவறியதே இல்லை.
26
எப்பொழுதும் ஒரே மாதிரியான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுக்காமல், தனித்துவமான கதாபாத்திரங்களில் மட்டுமே தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.
இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் "நான் கடவுள் இல்லை" படத்தில் முழு நீள ஆக்ஷன் அவதாரத்தில் தோன்றிய சாக்ஷி, தனது அற்புதமான நடிப்பில் ஒரு வித்தியாசமான பரிமாணத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
46
அதே போல் தற்போது நடிகர் பிரபுதேவா கதாநாயகானாக நடித்து, சமீபத்தில் வெளியான ‘பஹீரா’ படத்தில் மாறுபட்ட வேடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திரம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் பல முன்னணி திரைப்பட இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், சாக்ஷி அகர்வாலை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் சாக்ஷி தொடர்ந்து ஒரே சாயலில் இருக்கும் பாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை. வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட மாறுபட்ட கதாபாத்திரங்கள் மூலம் தனது நடிப்புதிறமைக்கு தீனி போட விரும்புகிறார்.
66
தற்போது, அவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியீட்டிற்கு தயாராகி உள்ளது. அந்த பாடகங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என மனம் திறந்து கூறியுள்ளார் சாக்ஷி அகர்வால்.