தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய். இவரை இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சினிமாவில் அறிமுகப்படுத்தி இருந்தாலும், தனது விடா முயற்சியால் முன்னேறி தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். நடிகர் விஜய்யின் ஆரம்ப காலகட்டத்தில் அவரை பாரதிராஜா உள்பட பல்வேறு முன்னணி இயக்குனர்கள் தங்களது படங்களில் நடிக்க வைக்க மறுத்ததாக எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.