தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் விஜய். இவரை இவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சினிமாவில் அறிமுகப்படுத்தி இருந்தாலும், தனது விடா முயற்சியால் முன்னேறி தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். நடிகர் விஜய்யின் ஆரம்ப காலகட்டத்தில் அவரை பாரதிராஜா உள்பட பல்வேறு முன்னணி இயக்குனர்கள் தங்களது படங்களில் நடிக்க வைக்க மறுத்ததாக எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
அதில் அவர் பேசியதாவது : “சினிமாவில் நிறைய படங்களை இயக்கியதன்மூலம் நிறைய பணம் சம்பாதிக்க முடிந்த என்னால் தங்கர் பச்சான் போல் நல்ல இயக்குனர் என்கிற பெயரை சம்பாதிக்க முடியவில்லை. விஜய்யின் ஆரம்ப காலகட்டத்தில் அவரை ஹீரோவாக்க முயன்றபோது, பாரதிராஜாவிடம் விஜய்யின் புகைப்படங்களை காண்பித்தேன். அவர் ஏங்கிட்ட ஏன் இதையெல்லாம் கொண்டுவந்த என கேட்டுவிட்டார்.
பாரதிராஜா மட்டுமின்றி பல்வேறு முன்னணி இயக்குனர்கள் விஜய்யை நடிக்க வைக்க மறுத்துவிட்டனர். அவர்கள் நடிக்க வைக்க மறுத்ததும் ஒரு விதத்தில் நல்லதாபோச்சு. என்னிடம் வந்ததால் தான் விஜய் தற்போது கமர்ஷியல் ஹீரோவாக மாறி இருக்கிறார்” என எஸ்.ஏ.சந்திரசேகர் அந்த விழாவில் பேசி இருந்தார். ஏற்கனவே விஜய்க்கும், அவரது தந்தைக்கு எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில், அவர் பட விழாவில் விஜய்யை பற்றி தற்போது பேசி உள்ளது கவனம் பெற்றுள்ளது.
இதையும் படியுங்கள்... நிற்ககூட முடியல... ரோபோ சங்கரின் இந்த நிலைமைக்கு காரணம் என்ன? பயில்வான் சொன்ன ஷாக் தகவல்