இப்படி சினிமாவில் அறிமுகமாகி தொடர்ந்து 3 படங்கள் வெற்றியடைந்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்தாலும், தனுஷ் சந்தித்த விமர்சனங்கள் ஏராளம். குறிப்பாக அவர் மிகவும் ஒல்லியாக இருந்ததை ஏராளமானோர் கிண்டலடித்து வந்தனர். விமர்சனங்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு சினிமாவில் புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம், பொல்லாதவன் என அடுத்தடுத்து வெற்றிவாகை சூடியதோடு, ஆடுகளம் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வென்று தன்னை விமர்சித்தவர்களுக்கு தன் திறமையால் பதிலடி கொடுத்தார்.