உன் பொண்டாட்டி போட்டோவை மார்பிங் செஞ்சி போடவா? ... போலீஸை பற்றி பயமில்லாமல் மிரட்டல் விடும் ரவுடி பேபி சூர்யா!

First Published Jul 6, 2021, 6:50 PM IST

யூ-டியூப்பில் ஆபாசமாக பேசிய பப்ஜி மதன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா, சாதனா உள்ளிட்டோரது யூ-டியூப் சேனல்களை முடக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. 

டிக்-டாக்கில் அரைகுறை ஆடையுடன் ஆபாச நடனமாடி பேமஸ் ஆனவர் ரவுடி பேபி சூர்யா. தற்போது யூ-டியூப் சேனல் மூலமாக வீடியோ போடுவது, ஆபாசமாக பேசுவது, கொச்சையான வார்த்தைகளை பேசி சண்டையிடுவது என சமூக வலைத்தளத்தில் வேண்டாத வேலைகளை செய்து வருகிறார்.
undefined
யூ-டியூப்பில் ஆபாசமாக பேசிய பப்ஜி மதன் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா, சாதனா உள்ளிட்டோரது யூ-டியூப் சேனல்களை முடக்க வேண்டும் என்றும், அவர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்து வருகிறது. அதையே நக்கலடிக்கும் விதமாக ரவுடி பேபி சூர்யா வீடியோ வெளியிட்டது எல்லாம் தனிக்கதை.
undefined
சமீபத்தில் ரவுடி பேபி சூர்யா சிங்கப்பூருக்கு சர்வீஸுக்குப் போறேன் நீயும் வர்றியா? என டிக்-டாக் பிரபலமான இலக்கியாவை அழைக்கும் ஆடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இதையடுத்து அந்த ஆடியோவை வெளியிட்ட யூ-டியூப் சேனலைச் சேர்ந்த நபரை ரவுடி பேபி சூர்யா மிரட்டும் ஆடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
undefined
அந்த ஆடியோவில் உன் போட்டோவையும், உன் பொண்டாட்டி போட்டோவையும் எடுத்து மார்பிங் செஞ்சி யுடியூப் போன்ற சோஷியல் மீடியால வெளிய விடுவன். நீங்க தானா உங்க போன சுவிட்ச் ஆப் செய்ற நிலைமை வரும். உன்னோட பிசினஸ் பாதிக்கவச்சு, மான மரியாதைய காத்தில பறக்கும். தைரியம் இருந்தா உன் பொண்டாட்டியை போய் போலீஸ் ஸ்டேசன்ல புகார் கொடுக்க சொல்லு என மிரட்டுகிறார்.
undefined
என் வக்கீல் கிட்ட கூட பேசிட்டேன். உன் பொண்டாட்டி என்கிட்ட மன்னிப்பு கேட்காவிட்டால், அவ போட்டோ தான் யூ-டியூப்பில் ஓடும். இந்த ஆடியோ ரெக்காட்டை எடுத்து வச்சிக்க, போலீஸ் கிட்ட காட்ட வசதியா இருக்கும் என கொஞ்சம் கூட பயமில்லாமல் நக்கலாக பேசியுள்ளார்.
undefined
ஆபாச நடனம், கொச்சை பேச்சு என யூ-டியூப்பில் சேட்டை செய்து வந்த ரவுடி பேபி சூர்யா, தற்போது எல்லை மீறி பெண் ஒருவரின் புகைப்படத்தை மார்பிங் செய்து சோசியல் மீடியாவில் விடுவேன் என பகிரங்கமாக மிரட்டியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இனியாவது இவர் மீது காவல்துறை நடவடிக்கை பாயுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
undefined
click me!